திங்கள், 23 ஆகஸ்ட், 2021

உலக நாடுகளும் ஆட்சி முறைகளும்.(monarchy)


பிளேட்டோவின் ஆறு ஆட்சி முறைகள்:

கிரேக்க நாகரீகத்தின் தந்தையாக போற்றப்படும் பிளேட்டோ இந்த உலகில் மக்களை ஆட்சி செய்வதற்கு  ஆறு வழிகள் இருப்பதாக தன்னுடைய (ரிபப்ளிக்)குடியரசு என்ற புத்தகத்தில் வரையறுத்துக்கூறியுள்ளார்.அவற்றை முதலில் நாம் அறிந்து கொண்டால் அரசியல் ஆட்சி சம்மந்தமான சரியான புரிந்துணர்வை நமக்கு ஏற்படுத்த அது மிக உதவியாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவற்றை முதலில் இங்கு நான் குறிப்பிட்டுவிடுகின்றேன்.

1.ஒருவர் மட்டும் ஆட்சி செய்வது.

2.அறிஞர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

3.செல்வந்தர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

4.இரானுவ வீரர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்வது.

5.சட்டங்களை தொகுத்து அதன்படி குறிப்பிட்ட ஒரு சாரார்கள் ஆட்சி செய்வது.

6.மக்களே தன் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களே ஆட்சி செய்வது.

இந்த ஆறு வழிமுறைகளில் மட்டுமே ஒரு நாட்டு மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாகவே பிளாட்டோ வரையறுத்து சென்றிருப்பது அறிவு உலகில் மிகப்பெரும் சாதனையாக போற்றப்படுகின்றது.ஏனெனில் இந்த ஆறு முறைகளில்தான் இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யப்பட்டும்வருகின்றது.இந்த ஆறு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தும் பிளேட்டோ இவற்றில் ஆறாவது வழிமுறையே மக்களுக்கு சிறந்தது என்றும் அதற்குத்தான் முறையான குடியரசு ஆட்சி என்றும் அவர் பெயரிடுகின்றார்.மேலும் இந்த ஆட்சியானது முற்றிலும் நீதி என்ற ஒற்றை வார்த்தைக்குள்ளே அடங்கி இருக்கவேண்டும் என்பதையும் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றார்.

இந்த குடியரசை நிலைநாட்டவே முதலாம் உலகப்போர் தொடர்ந்து பல்வேறு யுத்தங்கள் நடைபெற்றதாகவும் சில வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு விவரிக்கின்றன.பின்வரும் கட்டுரைகளில் குடியரசு என்பதைப்பற்றியும் மக்களாட்சி பற்றியும் விவரிக்கின்றேன்.இப்பொழுது இந்த கட்டுரையில் மன்னராட்சி என்றால் என்ன ?என்பது சம்மந்தமாகவும் அது எப்படி கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பது சம்மந்தமாகவும் மேலும் அது இன்று எவ்வாறு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாகவும் விவரிக்கின்றேன்.

மன்னராட்சி என்பது என்ன.?

ஆரம்ப காலகட்டங்களில் மன்னர் ஆட்சியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்ததாக நம்மால் வரலாற்றில் காணமுடிகின்றது.இதனை தமிழில் முடியாட்சி என்று அழைத்து வந்துள்ளனர்.இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான மொனார்சி(monarchy)என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.இந்த முடியாட்சி என்பது ஒரு நபரிடமே அனைத்து அதிகாரங்களையும் குவித்து கொடுத்துவிட்டு மக்களுக்கும் அரசிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை கடைபிடிக்கச் செய்யும் ஒரு முறையாகவே கடைபிடிக்கப்படுவதாகும்.இவற்றில் அரசரின் வாரிசு மட்டுமே அரசராக முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகும்.

மேலும் அவ்வரசர் தானாக இறக்கும் வரையிலும் அல்லது தானாகவே எனக்கு இந்த மன்னர் பதவி வேண்டாம் என்று விலகும் வரையிலும் அவரே பதவியில் இருப்பார் என்பது மன்னராட்சியில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. மேலும் ஒரு நாட்டின் அரசன் எவ்வித சட்டதிட்டதிற்கும் உட்படாத ஒருவனாகவே பார்க்கப்பட்டுவந்தான்.இதனால் பெரும்பாலான நாடுகளில் அரசனே அம்மக்களால் கடவுளாக வணங்கப்பட்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.இன்றைக்கும் சீனா ஜப்பான் நேப்பால் போன்ற நாடுகளில் அவர்களின் அரசரையே அவர்கள் கடவுளாக வணங்கி வருவது இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

இன்றைக்கும் மன்னராட்சி கடைபிடிக்கப்படுகின்றதா.?

21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும் கிட்ட தட்ட 47 நாடுகளில் மன்னர் ஆட்சியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அவற்றில் குறிப்பிட தக்க சில நாட்டின் பெயர்களை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஜப்பான்,மலேசியா,சுவேசர்லாந்து,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், மொராக்கோ போன்ற பெரும் நாடுகளில் இன்று வரை மன்னராட்சியே நடைபெற்று வருகின்றது.

மன்னராட்சியின் விளைவுகள் என்ன?

1.மேலே நான் குறிப்பிட்டதுபோல் மன்னராட்சி என்பது மக்களை முற்றிலுமாக அரசு அதிகாரத்திற்குள் விடாத அரசுமுறையாக இருக்கின்றது என்பதால் மக்கள் தொகை அதிகம் நிறைந்த நாடுகள் இதனை முற்றிலும் எதிர்த்தன. இதற்காக பல யுத்தங்களும் நடத்தப்பட்டே இன்று மக்களின் குடியாட்சி அல்லது மக்களாட்சி என்பது தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

2.சர்வாதிகாரத்திற்கான முழு வாய்ப்பும் இந்த மன்னராட்சியில் இருப்பதாலும் முந்தய கால மக்கள் அவ்வாறு அடக்கி ஆளப்பட்டதாலும் இந்த மன்னராட்சியை இன்றைய மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

3.ஒரே நபரிடம் அதிகாரம் முழுவதையும் இந்த மன்னராட்சிமுறை கொடுத்துவிடுவதால் அவரின் தனிப்பட்ட முடிவுகளால் ஒட்டு மொத்த  மக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கவேண்டிய சூழழுக்கு தள்ளப்படுகின்றனர்.இதனாலேயே முந்தைய ஐரோப்ப நாடுகளில் பல சமயங்களில் மிகப்பெரும் புரட்சிகள் வெடித்தாகவும் நம்மால் காண முடிகின்றது.

தொடர்ந்து பார்ப்போம்..!

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

மூளையை எவ்வாறு புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வது?(Brain freshness)


நம்மை பார்த்து நம் பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ என்றாவது ஒரு நாள் உனக்கு மூளையே இல்லையா? என்றோ அல்லது ஆள்தான் வளர்ந்திருக்கின்றாய் ஆனால் மூளை வளரவே இல்லை என்றோ திட்டிய அனுபவம் கட்டாயம் இருந்திருக்களாம் .அப்பொழுது மூளை வளருமா..?என்றும் கூட நாம் யோசித்திருக்களாம்.ஆம் அண்பர்களே தலையில் காணப்படும் மூளை என்பது வளரும் தன்மைமிக்கதே என்றே பல்வேறு ஆராய்ச்சியாளார்களும் குறிப்பிடுகின்றனர்.மேலும் அது சிறப்பாக வளர்வதற்கென்று சில பயிற்சிகளும் உண்டு என்றும் குறிப்பிடுகின்றனர்.

அப்பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு மூளையின் வளர்ச்சியை எதன் அடிப்படையில் அளவிடப்படுகின்றது என்பதைப்பற்றியும் அறிந்து கொள்வோம்.ஒருவரின் மூளையின் வளர்ச்சி என்பது அவருடைய சிந்தனையையும்,கவனத்தையும் வைத்தே அளவிடப்படுகின்றது.ஏனெனில் ஒருவரின் மூளை வளர்வதற்கு ஒரு பொருளின் உண்மைத் தன்மையை சிந்திப்பதும்,சிந்தித்த அதனை விளக்கி சொல்வதும் மிக அவசியம் என்று கூறப்படுகின்றது.

யாருக்கு ஒரு பொருளை இன்ன பொருள் என்று அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லையோ அவருடைய மூளை வளர்ச்சிபற்றாத மூளை என்பதாகவே அறிவியல் உலகில் கருதப்படுகின்றது.எனவே நம் மூளை வளர்வதற்கு நம்முடைய சிந்தனையே முதல் அடிப்படை காரணியாக இருக்கின்றது என்பதால் அதனையே நம்முடைய மூளையின் வளர்சிக்கான அளவுகோளாக பார்க்கப்படுகின்றது.

2. ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்துவதும் நம் மூளையின் வளர்ச்சிக்கான முக்கிய அளவுகோளாகும்.யாருக்கு ஒரு பொருளின் மீது முறையாக கவனம் செலுத்த முடியவில்லையோ அவரும் அறிவியளாலர்களால் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே பார்க்கப்படுகின்றார். ஏனெனில் ஒரு பொருளை இன்னது என்று அறிவதற்கு முதலில் அப்பொருளில் கவனம் செலுத்தும் தன்மை அதிகமாக இருக்க வேண்டும்.அது இல்லையெனில் அவர் மூளை வளர்ச்சி பற்றாதவராகவே கருதப்படுவார் என்றே மருத்துவர்கள் பலரும் கூறுகின்றனர்.

ஆக ஒரு மனிதனின் சிந்தனை மற்றும் கவனம் இவை இரண்டையும் அடிப்படையாக கொண்டே ஒரு மனிதனின் மூளையின் வளர்ச்சி அளவிடப்படுகின்றது.இந்த இரண்டையும் சீராக்குவதற்கு பல்வேறு பயிற்சிகளை நம் அறிஞர்கள் கற்றுக் கொடுக்கின்றனர்.

அவற்றில் சிலவற்றை இப்பொழுது நாம் பார்ப்போம்.

மூளை வளர்ச்சிக்கான பயிற்சிகள்:

1. நாம் நம்முடைய கவனத்தையும்,சிந்தனையையும் சீராக்குவதற்கே வணக்க வழிபாடுகளும்,அதில் மொழியப்படும் மந்திரங்களும் உறுவாக்கப்பட்டது என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.இன்றைய பெரிய மதங்களாக பார்க்கப்படும் அனைத்து மதங்களும் அவற்றின் வணக்க வழிபாடாக பெரும்பாலும் சிந்தனையை ஓர் முகப்படுத்துவதையே கற்றுக்கொடுக்கின்றது என்பதும் நிதர்சனமான உண்மையேயாகும்.

எனவே நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் ஓர் முகப்படுத்த வணக்கங்களே மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கின்றது.அதனை நாம் தொடர்ந்து கடைபிடித்து வருவோமேயானால் நம்முடைய சிந்தனையும் கவனமும் நிச்சயமாக நம்முடைய கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ள முடியும்.

2. இரண்டாவதாக மூச்சு பயிற்சி செய்வதும் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்குகின்றது என்பதாகவே பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.உதாரணமாக இன்றைய யோகா போன்ற உடற்பயிற்சி கலையில் இந்த மூச்சுப்பயிற்சி என்பதும் வழங்கப்படுகின்றது.அதாவது மூச்சை நாம் கவனிப்பதின் மூலம் நம்முடைய கவனம் மற்ற விஷயங்களை விட்டும் தூரமாவதாகவும்,மேலும் அதனால் நம்முடைய எண்ண ஓட்டங்கள் சீராகுவதாகவும் கூறப்படுகின்றது.ஆக மூச்சு பயிற்சியின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனைகளையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.

3.அழகாக காணப்படும் இயற்கை இடங்களை அவ்வப்பொழுது சந்தித்து வருவதாலும் நம்முடைய சிந்தனை புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்றே அதிகமான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது புதுபுது இடங்களுக்கு நாம் செல்வதால் நம்முடைய மூளையில் புதிய ஹார்மோன்கள் சுரந்து அது நம்முடைய சிந்தனையை புத்துணர்வுமிக்கதாக ஆக்குகின்றது என்று அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே புதிய இடங்களுக்கு பயணம் செய்வதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக் கொள்ள முடியும்.

4.நல்ல வாசனை திறவியங்களின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது ஒரு நல்ல வாசனை நம்முடைய மூளையில் பல்வேறு புதிய ஹார்மோங்களை சுரக்கச்செய்கின்றது என்றும் அதனால் நம்முடைய மூளை மிக சுறுசுறுப்பாகின்றது என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நல்ல வாசனை திறவியங்களை பயன்படுத்துவதின் மூலம் நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்ள முடியும்.

5.நல்ல ராகங்களை கேட்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்துணர்ச்சிமிக்கதாக ஆக்க முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது இனிமையான ராகங்கள் நம் மனதை வருடி பிறகு அது நமக்குள் பல்வேறு புதிய சிந்தனைகளை உறுவாக்குகின்றது என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.எனவே நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் சீராக்க நாம் நல்ல ராகங்களை கேட்பது மிகச்சிறந்த வழிமுறையாகும.

6.நல்ல புத்தகங்களை படிப்பதின் மூலமும் நாம் நம்முடைய சிந்தனையையும், கவனத்தையும் புத்தூக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்று பல்வேறு அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.அதாவது வாசிப்பு என்பது நாம் நம்முடைய மூளைக்கு போடும் தீணியைப்போன்றதாகும்.அதனை நம்முடைய மூளை எந்தளவிற்கு பெறுகின்றதோ அந்தளவிற்கு அது புத்துணர்ச்சிமிக்கதாக ஆகின்றது என்பதாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே நாம் நம்முடைய சிந்தனையையும்,கவனத்தையும் சீராக்கிக்கொள்வதற்கு புத்தகங்கள் வாசிப்பது என்பது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

இந்த ஆறு வழிமுறைகளும் நாம் நம்முடைய சிந்தனையை சீராக வைத்துக்கொள்வதற்கும்,நம்முடைய கவனத்தை செம்மைபடுத்திக் கொள்வதற்கும் மிக உதவியாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.முடிந்தளவு நீங்களும் கடைபிடித்து வாருங்கள்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

யார் இந்த சாக்ரடீஸ்?(Socrates)

யார் இந்த சாக்ரடீஸ்
யார் இந்த சாக்ரடீஸ்

முன்னுரை:

சாக்ரடீஸ் அறிவியல் உலகில் அரிஸ்டாட்டிலை காட்டிலும் மிக பிரபல்யமான ஒரு நபராக கருதபடுகின்றார்.ஏனெனில் சாக்ரடிஸின் மாணவர் பிளேட்டோவின் மாணவர்தான் அரிஸ்டாட்டில் ஆவார்.ஆகவே இயற்பியலின் தந்தையாக அரிஸ்டாட்டில் போற்றப்பட்டாலும் அவருக்கெல்லாம் ஆசானாக திகழ்ந்த சாக்ரடீசே கிரேக்க நாகரீகத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்.

இவர் தன்னுடைய வாழ்வில் எந்த புத்தகத்தையும் தொகுத்துக் கொடுக்கவில்லை என்பதால் இவருடைய மாணவர்களாளே இவர் பெரிதும் அறியப்படுகின்றார்.இவருடைய மாணவர் பிலேட்டோ (Great dialogue of plato)என்ற புத்தகத்தில் தன் ஆசிரியரின் பெருமைகள் சிலவற்றையும் பகிர்ந்திருக்கின்றார்.அவற்றில் சிலவற்றை இங்கு நாம் பார்ப்போம்..!

சாக்ரடீஸ் என்பவர் ஆரம்ப காலத்தில் படைவீரராக இருந்துவந்தார் .
பிறகு வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்ளும் வேட்கையோடும் தன் நாட்டு இளைஞர்களை நல்முறைபடுத்தும் எண்ணத்திலும் அப்படையிலிருந்து விலகி தத்துவவியலை உறுவாக்கத்தொடங்கினார்.அதில் தேர்ச்சியும் பெற்றார்.
பிறகு அதனை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக முழு பிரச்சாரகராகவும் பணியாற்றத்தொடங்கினார்.இந்த உலகில் ஒவ்வொரு பொருளையும் பார்த்து ஏன்?எதற்கு?எப்படி?என்ற கேள்வியை ஒவ்வொரு இளைஞனும் கேட்க வேண்டும் என்று போதித்தார்.கேள்வி கேட்பதற்கென்றே ஒரு தனி சபையையும் ஏற்படுத்தி வைத்திருந்தார்.

அங்கு வாலிபர்களின் கூட்டம் அலைமோதும் அளவிற்கு அவருடைய கேள்வியும் பதிலும் அமைந்திருக்கும்.இவருடைய பகுத்தறிவை கண்ட அத்துனை வாலிபர்களும் இவருக்கு உற்ற சீடர்களாக தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் தான் பிலேட்டோவும்.இன்னும் சொல்லப்போனால் இவருடைய அறிவு ஞானத்தை கண்ட ஒரு பெண் தானே முன்வந்து தன்னை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டதால் அவளையே சாக்ரடீஸ் திருமணம் முடித்துக் கொண்டதாகவும் நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.

ஆக அவருடைய அறிவாற்றலை போற்றும் மக்கள் ஒரு புறம் தோன்றினாலும் அந்த ஊரில் இருந்த செல்வந்தர்களுக்கும் ஆட்சியாளர்களில் சிலருக்கும் அவரை பிடிக்கவில்லை.அவருடைய அந்த போதனையை விட்டுவிட வேண்டும் என்று சாக்ரடீஸிற்கு அழுத்தம் கொடுத்தார்கள்.ஆனால் அதனை மறுத்துவிட்ட சாக்ரடீஸ் அவருடைய பிரச்சார்த்தை தொரர்ந்து செய்து வந்தார்.ஒரு கட்டத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த செல்வந்தர்கள் அவரை கைதும்செய்தனர்.

அதாவது இளைஞர்களை கெடுப்பதாகவும்,பகுத்தறிவு என்ற பெயரில் தங்களின் கடவுள்களை அவமதிப்பதாகவும் சில ஊர் பெரியவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.வழக்கு பஞ்சாயத்தில் வைக்கப்பட்டது.அப்பொழுதும் சாக்ரடீஸிடம் நீங்கள் உங்கள் பிரச்சாரத்தை விட்டுவிடுங்கள்,அப்படி விட்டுவிட்டால் உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் சாக்ரடீஸ் தான் மக்களின் அறியாமையை போக்கவே பாடுபடுகின்றேன் என்றும் அது என்னுடைய பார்வையில் குற்றமல்ல என்றும் கூறி நான் இதை ஒருபோதும் விடப்போவதில்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

பிறகு கோபமடைந்த மக்களோ அவருக்கு மரண தண்டனையை விதித்தார்கள்.இறுதியில் அவருக்கு விஷம் கொடுத்து கொல்லவும்பட்டார் என்றே வரலாறு முடிகின்றது.சாக்ரடீஸின் வாழ்வில் நாம் படிப்பினை பெற மிக அதிகமான விஷயங்கள் இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே இங்கு நான் அவருடைய வாழ்வை சுறுக்கமாக பதிவிட்டுள்ளேன்.அவர் இந்த உலகிற்கு சொல்ல வந்த முதல் விஷயம் அறிவு என்பது சுதந்திரமாக சிந்திப்பதில் தொடங்குவதுதான் என்பதேயாகும்.

அதாவது நாமே ஒன்றை நிர்னயித்து வைத்துக்கொண்டு அதைப்பற்றி எந்த கேள்வியும் எழுப்பக்கூடாது என்றோ அல்லது அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என்றோ அறிவை அடக்கி வைத்துவிடக்கூடாது என்பதை ஆழமாக அவர் தன் வாழ்வில் உணர்த்திவிட்டு சென்றுள்ளார்.இன்றைய உலகில் அதிகமான பெற்றோர்களும்,ஆசிரியர்களும் இந்த தவறை செய்வதை நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.அதாவது ஒரு குழந்தை கேள்வி எழுப்பினால் உடனே அதனைப்பார்த்து மக்கு உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா?என்று மட்டம் தட்டி அமர்த்திவிடவே முயற்சிக்கின்றோம்.

ஆனால் சாக்ரடீஸ் யார் கேள்வி எழுப்பமாட்டானோ அவன்தான் மிகப்பெரும் முட்டால் என்று விவரிக்கின்றார்.மேலும் அவன் ஒரு கோழை என்பதாகவும் சுட்டிக்காண்பிக்கின்றார்.ஆக அறிவு என்பது கேள்வியிலிருந்து பிறப்பதுதான். எனவே அனைவரையும் கேட்கவிடுங்கள் என்றே அவர் வலியுறுத்துகின்றார். மேலும்  மூடநம்பிக்கைகளை ஒழிக்க அதுவே தீர்வாக அமையும் என்பதையும் அவர் ஆழமாக நம்புகின்றார்.எனவே அண்பர்களே..!

உங்கள் குழந்தைகளோ அல்லது பணியாட்களோ அனைவரையும் கேள்வி எழுப்பவிடுங்கள்.உங்கள் கோபத்தாலோ அல்லது எறிச்சலாலோ அதனை தடுக்க முயற்சிக்காதீர்கள்.ஏனெனில் அங்கிருந்துதான் நல்அறிவும் நல்ல புரிந்துணர்வும்  ஆரம்பமாகின்றது.என்னைப்பார்த்து நீயெல்லாம் கேள்வி கேட்பதா?என்ற ஆணவத்தால் அறிவுக்கதவுகளை தயவுசெய்து அடைத்து விடாதீர்கள்..!அறிவே நலவு என்ற சாகரடீஸின் கருத்துக்கு ஒப்ப நம் வாழ்வையும் அமைத்து அற்புதமான ஒரு சமூகம் படைப்போமாக...

எதற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது?(Money Management)

முன்னுரை:

என்னிடம் அதிகமானோர் கேட்கும் கேள்வி "பணத்தை எப்படி வீணாக செலவழிக்காமல் பாதுகாப்பது என்பது பற்றித்தான்..!எனவே அது சம்மந்தமாக சுறுக்கமாகவும்,அனைவருக்கும் ஏற்றதாகவும் இருக்கும் அளவிற்கு விளக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை வடிவமைத்தேன்.இது உங்கள் அனைவருக்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.அனைவரும் படித்து பிரயோஜனம் அடைவதோடு உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தும் பிரயோஜனம் பெறச்செய்யுங்கள்..!

எதெற்கெல்லாம் பணத்தை செலவழிக்கக் கூடாது?

1.மலிவான பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் செலவழிக்காதீர்கள்.அதாவது மிக மட்டமான ஒரு பொருள் மிக மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக மட்டும் வாங்காதீர்கள்.அது உங்களுடைய பணத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

2.நோயை தரும் பொருட்களை வாங்கி உண்ணுவதற்காக உங்கள் பணத்தை செலவழிக்காதீர்கள்.உதாரணமாக போதை தரும் மது,கஞ்சா,பான் பாக்குகள், மேலும் சிகரெட்கள் போன்றவற்றிற்காக உங்கள் பணத்தை ஒருபோதும் வீணடிக்காதீர்கள்.இவைகள் அனைத்தும் உங்கள் பணத்தையும் அழித்து உங்கள் ஆரோக்கியத்தையும் நிம்மதியையும் நிச்சயம் இழக்கச்செய்துவிடும். எனவே எவையெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு தீங்குதரும் என்று எண்ணுவீர்களோ அப்பொருட்களை வாங்குவதில் உங்கள் பணத்தை ஒரு பொழுதும் வீணடிக்காதீர்கள்.

3.மக்களுக்கு நீங்கள் மிகப்பெரும் பணக்காரர் என்று காட்டுவதற்காக மட்டும் கவர்ச்சிமிக்க பொருளை வாங்கிவைத்துக்கொள்வதில் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.அதாவது விலை உயர்ந்த ஒரு பொருளை  மக்களிடம் காட்டுவதற்காக மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளாதீர்கள்.அதனால் உங்களுக்கு நலவை விட தீங்கே வந்தடையலாம்.மேலும் அப்பொருளை நீங்கள் பேணிப்பாதுகாக்கவும் தேவையிருக்கும்.எனவே உங்களுக்கு என்ன தேவையோ அந்த பொருட்களை மட்டும் உங்கள் மனதிற்கு பிடித்தவாறு வாங்கிக்கொள்ள முயற்சிசெய்யுங்கள்.வெறும் கவர்ச்சிக்காக மட்டும் உங்கள் பணத்தை வீணடிக்காதீர்கள்.

4.உங்களுக்கு எது புரியவில்லையோ அதில் உங்கள் பணத்தை ஒருபொழுதும் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக ஜோசியம்,குறி சொல்லல்,மாயம்,மந்திரம் என்ற மறைவான விஷயங்களுக்காக உங்களுடைய பணத்தை ஒருபோதும் செலவழிக்காதீர்கள்.ஏனெனில் இவைகள் பெரும்பாலும் ஏமாற்றுவதற்கும் பித்தலாட்டங்கள் செய்வதற்குமே பயன்படுகின்றன.எனவே உங்களுடைய பணத்தை இது போன்ற விஷயங்களில் வீணடித்துவிடாதீர்கள்.

5.உங்களுக்கு தெறியாத வியாபாரத்தில் முதலீடு செய்யாதீர்கள்.உதாரணமாக பங்குச்சந்தையில் எந்த நிறுவனத்தின் பங்கை வாங்குவது எப்படி வாங்குவது பிறகு அதனை எப்படி கையாள்வது என்ற எந்த அடிப்படை அறிவுமில்லாமல் அதில் உங்கள் பணத்தை செலவழித்துவிடாதீர்கள்.அது உங்களுடைய பணத்தை புள்ளுக்கு இறைத்த நீராக ஆக்கிவிடும்.

6.தேவையற்ற (பெட் ) பந்தயம்கட்டாதீர்கள்.உதாரணமாக கிரிக்கெட்டில் இந்த அணிதான் வெள்ளும் என்றோ அல்லது இந்த அணி தோற்கும் என்றோ பந்தையம்கட்டாதீர்கள்.இதுவும் உங்களுடைய பணத்தை தேவையில்லாமல் வீணடிப்பதற்கே பயன்படக்கூடியதாகும்.

7.சூது,தாயம் போன்ற விளையாட்டுக்களில் உங்கள் உழைப்பை ஒருபொழுதும் வீணடித்துவிடாதீர்கள்.அவற்றைவிட உங்கள் வருமானத்தை விணடிக்கும் ஒரு செயல் வேறொன்றுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

8.உங்கள் புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ அவசியமின்றி சமூகவளைதளங்களில் பணம் கொடுத்து பதிவேற்றம் செய்யாதீர்கள்.அதனை விளம்பரப்படுத்துவதற்கும் உங்களுடைய பணத்தை முடிந்தளவு செலவழிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் பெரும்பாலும் சமூகவளைதளங்கள் என்பது நிஜமற்றதாகவே இருக்கின்றது. எனவே முடிந்தளவு உங்கள் பணத்தை அவற்றில் செலவழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9.பொழுது போக்கு காட்சிகளுக்காக உங்களுடைய பணத்தை அதிகம் செலவழிக்காதீர்கள்.உதாரணமாக அதிக பணம் கொடுத்து அடிக்கடி திரையரங்குகளுக்கு செல்வது,அல்லது அதிக பணம் கொடுத்து ப்ரீமியம்(premium) காணொளிகளை பெறுவது போன்ற விஷயங்களை பெறும்பாலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.இவற்றில் உங்களுடைய பணம் வீணாவதைவிட்டும் முடிந்தளவு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

10.உங்கள் வருமானத்தில் 20 % மேல் செலவை தரும் வீடுகளை வாடகைக்கு எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.அதாவது உங்களுக்கு போதுமான அறைகளை கொண்ட ஒரு நல்ல வீட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.தேவையின்றி அதிகமான அறைகளை கொண்ட மிக விலை உயர்ந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து உங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை வீணடித்துவிடாதீர்கள்.

11.அருகில் சென்று வருவதற்கெல்லாம் அடிக்கடி வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.இதனால் பெட்ரோல்,மற்றும் டீசலும் வீணாகும் உங்கள் ஆரோக்கியமும் வீணாகும்.எனவே முடிந்தளவு அருகில் நடந்தே சென்றுவிடும் இடங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள். அவற்றிற்கு மாற்றாக சைக்கிள்களையும் பயன்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

மேற்கூறிய இந்த 11 விஷயங்களையும் உங்களால் முடிந்தளவு கடைபிடித்து வாருங்கள்.இதனால் நிச்சயம் உங்கள் பணம் உங்களுடைய கட்டுக் கோப்பில் இருக்கும்.

எழுத்தாளார்:

 Dr.S.Dhana Priya 

புதன், 18 ஆகஸ்ட், 2021

நீங்களும் வெற்றியாளராகலாம்.(success)


முன்னுரை:

இந்த உலகில் நீங்களும் ஒரு வெற்றியாளராக வேண்டும் என்ற ஆசையிருக்கின்றதா?அல்லது இந்த உலகில் நீங்களும் தனித்துவமிக்க ஒரு நபராக வேண்டும் என்ற வேட்கை இருக்கின்றதா?அப்படியானால் கீழே நான் குறிப்பிடும் சில அடிப்படையான விஷயங்களை கடைபிடியுங்கள்.நிச்சயம் நீங்களும் வெற்றியாளராகலாம்.

வெற்றியாளராவதற்கான வழிகள்:

1.முதலாவதாக நீங்கள் எத்துறையில் வெற்றிபெற நினைக்கின்றீர்களோ அத்துறையை முழுமையாக ஏற்கும்படி உங்கள் ஆழ்மனதிற்கு பயிற்சி அளியுங்கள்.ஏனென்றால் உங்கள் ஆழ்மனது ஒன்றை ஏற்றுவிட்டால் இந்த உலகில் யாராலும் அதனை தடுத்துவிட முடியாது என்பதே மனோ தத்துவம் கூறும் மகத்தான உண்மையாகும்.

மேலும் மேலோட்டமான எண்ணம் கொண்ட ஒருவரால் ஒரு காரியத்தை எப்பொழுதும் சீராக செய்துவிட முடியாது என்பதே நிதர்சனமுமாகும்.எனவே நீங்கள் வெற்றி பெறத்துடிக்கும் அச்செயலை அளவுகடந்து நேசியுங்கள்.
அதனைப்பற்றியே பெரும்பாலும் சிந்தியுங்கள்.அது சம்மந்தமாகவே அதிகம் பேசுங்கள்..!இவ்வாறு நீங்கள் செய்துவந்தால் நிச்சயம் உங்கள் ஆழ்மனம் அவற்றிற்கு அடிமையாகிவிடும்.பிறகு நீங்கள் அதனைவிட்டும் தூரமானாலும் அது உங்களைவிடாமல் துரத்திப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

ஆக ஒரு வெற்றியாளனுக்கு வெற்றி காண பெறப்படவேண்டிய முக்கிய அம்சம் அதனை ஆழ்மனதால் நேசிப்பதுதான்.யாரிடம் அது இல்லையோ நிச்சயம் அவரால் வற்றியை அடைந்துகொள்ளமுடியாது என்பது எனது நம்பிக்கையாகும்.ஏனென்றால் மனிதன் எதனை தன் மனதால் விரும்பமாட்டானோ அதனை என்றைக்கும் பெற்றுக் கொள்ளவேமாட்டான் என்பது எழுதப்படாத விதியாகும்.ஒருவேளை அதனை பெற்றாலும் நிச்சயம் குறுகிய காலத்திலேயே அதனை இழந்துவிடுவான் எனபதே நிதர்சனமுமாகும்.

எனவே அண்பர்களே..!நீங்கள் வெற்றி காணவேண்டும் என்று துடிப்பதை அளவு கடந்து நேசியுங்கள்..!அவ்வாறு இல்லையெனில் முடிந்தளவு உங்கள் மனம் ஏற்காததை உங்கள் வெற்றிக்கான ஒன்றாக தேர்ந்தெடுத்துக் கொள்ளாதீர்கள்..!

2.இரண்டாவதாக நீங்கள் எத்துறையில் வெற்றிகாண விரும்புகின்றீர்களோ அத்துறையின் மீதே உங்கள் முழு கவணத்தையும் செலுத்துங்கள்.அதாவது நீங்கள் நேசிப்பது ஒன்றாக இருக்க வேறொன்றின் மீது உங்கள் கவனத்தை ஒரு காலமும் செலுத்தாதீர்கள்.ஏனென்றால் நீங்கள் எதில் வெற்றியைடைய துடிக்கின்றீர்களோ அதில் நீங்கள் கவனம் செலுத்த தவறினால் நிச்சயம் உங்களால் அதனை அடைந்து கொள்ளவே முடியாது என்பது எனது கண்ணோட்டமாகும்.

இன்றைக்கு பலரும் தான் ஒரு வெற்றியாளராக வேண்டும் என்ற சில கனவுகளோடுதான் வாழ்கின்றனர் என்றாலும் தன் கனவிற்கான பாதையில் அவர்கள் சிறிது கூட கவனம் செலுத்துவதில்லை என்பதே அவர்களின் கனவு நிறைவேறாததற்கு காரணமாகிவிடுகின்றது என்றே நான் கூறுவேன். பெரும்பாலானோர் தங்கள் கனவுகள் கலைந்து போவதற்கு காரணமாக சொல்வது வாழ்வாதாரத்தை தேடவேண்டியுள்ளது என்பதும்,தனக்கான குடும்ப பொறுப்பு இருக்கின்றது என்பதும்தான்.

ஆனால் என்னைப்பொறுத்தமட்டில் ஒரு வெற்றியாளனுக்கு தன் கனவுகளை நிஜமாக்க அடிப்படை தேவை அவனுடைய பொன்னான நேரம் மட்டுமே. அதனை அவன் தன் குடும்பத்துடனோ அல்லது அவற்றை தவிர்த்துவிட்டோ அடைந்து கொள்வதற்கு அவனே முடிவு செய்ய வேண்டும்.ஏனெனில் இந்த உலகில் தனித்துநின்று தன் கனவை அடைந்தவர்களுமுன்டு,தன் சுற்றத்தார்களோடே வெற்றி பெற்றவர்களும் உண்டு.இங்கு நாம் எந்தளவிற்கு நாம் நேசிக்கும் கனவின் மீது கவனம் செலுத்துகின்றோம் என்பதை பொறுத்தே நாம் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும்.

ஆக நீங்கள் ஒரு நல்ல வெற்றியாளனாக வேண்டுமானால் நீங்கள் நேசிக்கும் கனவை பின் தொடர்ந்துகொண்டே இருங்கள்.அதன் மீது அதீத கவனம் செலுத்திக்கொண்டே இருங்கள். நிச்சயம் உங்கள் வெற்றிக்கான இலக்கை மிக அருகில் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

3.மூன்றாவதாக நீங்கள் வெற்றி காணத்துடிக்கும் அவற்றை அடைவதற்கான திட்டங்களை முறைப்படுத்துங்கள்.ஏனெனில் திட்டமில்லாத ஒரு கனவு நிச்சயம் காணல் நீரிற்கு ஒப்பானதாகவே பார்க்கப்படும்.விலை உயர்ந்த வாகனமும் அற்புதமான சாலையும் இருக்கும் பொழுது அவற்றில் எவ்வழியாக பயணிக்கப்போகின்றோம் என்பதை நாம் நிர்னயம் செய்யவில்லையெனில் அடர்ந்த காடுகளிலோ அல்லது பாதையே இல்லாத புதர்களிலோ சிக்கிவிடும் வாய்ப்பு நமக்கு அதிகம் இருக்கின்றது.எனவே உங்கள் கனவிற்கான பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும்,எவ்வழியாக இருக்க வேண்டும் என்பதையும் முன்பே திட்டமிடுவது என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

திட்டமில்லாத கனவுகள் என்பது வெற்று ஆசையே என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் வெற்றியை அடைவதற்கான ஒரு திட்டத்தை அமைத்து அதில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் பயணித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை அவ்வப்பொழுது அளவிட்டுக் கொண்டே வாருங்கள்.இவ்வாறு நீங்கள் செய்துவந்தால் நிச்சயம் உங்கள் வெற்றிக்கான முதல் படியில் ஏறிவிட்டீர்கள் என்பதே பொருளாகும்.

4.நான்காவதாக உங்கள் வெற்றிக்கான பாதையில் கடிணமாக உழையுங்கள். அதனை அடைவதற்கான பாதைகள் என்னவெல்லாம் இருக்கின்றதோ அவை அனைத்தையும் அமல்படுத்துங்கள்.அதில் வரும் துன்பங்களையும், இன்னல்களையும் சகித்துக்கொள்ளுங்கள்,நஷ்டங்களையும்,இழப்புகளையும் சீர் செய்யுங்கள்,இவ்வாறு செய்து கொண்டே வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்வில் என்றேனும் ஒரு நாள் நீங்கள் கன்ட கனவு நிஜமாகிவிடும்.உங்கள் வெற்றிக்கான கனி உங்கள் கையில் தவளும்..! 

அன்பர்களே..!மேற்கூறிய இந்த நான்கு விஷயங்களையும் கடைபிடித்து வாருங்கள்.நீங்கள் எதில் வெற்றி காண நினைக்கின்றீர்களோ அவற்றில் நிச்சயம் வெற்றி காணமுடியும் என்றே நான் நம்புகின்றேன்.இலக்கை அடைவோம்..!வெற்றி காண்போம்..!