முன்னுரை:
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இவ்வேளையில் ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தொண்டரும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டா வெயிலில் தெருத்தெருவாக வாக்கு சேகரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.எங்கு பார்த்தாலும் கொடிகளும் கோஷமுமாய் தமிழகத்தின் பட்டிதொட்டிகளெல்லாம் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டிக்கொண்டிருக்கின்றது.ஆனால் அதேவேலையில் மற்றொருபுறம் தமிழகத்தின் முக்கிய கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ளும் விஷயத்தில் மிகப்பெரும் கலேபரம் நடந்தேரிக்கொண்டு வருகின்றது.
குறிப்பாக திமுகவினுடைய கூட்டணி கட்சியான,விசிகவிற்கு தொகுதி பங்கீடு விஷயத்தில் பெரிதும் வருத்தங்கள் இருப்பதாக விசிக தலைவர் தொள்.திருமாவளவன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அவற்றில் தாங்கள் 10 தொகுதி கேட்டிருந்தும் 8 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டது என்றும் அதிலும் தாங்கள் கேட்ட தொகுதிகள் முழுமையாக தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதால் தான் மிகவும் வருத்தப்படுவதாகக் கூறி அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடுவதாக முதலில் கூறியிருந்தார்.
அதற்கு காரணமாக தனது கட்சி மாநிலத்தில் இன்னும் வழுவாக இருக்க வேண்டிய தேவையிருப்பதாகவும்,வரும் காலங்களில் கொள்கை ரீதியாக தங்களது எதிரியான பாஜக தமிழகத்தில் காலூன்றுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு தான் தமிழக சட்டமன்றத்திற்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தேவையுள்ளது என்றும் தி ஹிந்து என்ற பத்திரிக்கைக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.பிறகு 4 நாட்களுக்கு பிறகு ஒரு பத்திரிக்கை கூட்டத்தை தானே கூட்டி தான் போட்டியிடும் தொகுதியிலும் மற்றொரு நபருக்கு வாய்ப்பு வழங்கப்போவதாக கூறி ஒரு நபரை அத்தொகுதிக்காக அறிவிப்பும் செய்துள்ளார்.
உண்மையில் திருமாவளவன் தனது மக்களின் உரிமைகளை காப்பதற்கும் இன்னும் வீரியமாக தனது மக்களுக்காக செயல்படுவதற்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு அவருக்கும் அவரது கட்சியினருக்கும் முழு உரிமையிருக்கின்றது.அதனைப்போன்றே தான் போட்டியிடப்போவதாக கூறிய அதே காட்டுமன்னார்கோயில் தொகுதியை வேறொரு நபருக்கு விட்டுக்கொடுக்கப்போவதாக கூறி அவரே ஒருவரை முடிவு செய்து அறிவிப்பு செய்வதற்கும் அவருக்கு முழுஉரிமை இருக்கின்றது என்றாலும் அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுக வுடனான கூட்டணியை வைத்துத்தான் இந்த 8 சட்டமன்ற தொகுதிகளின் சீட்டுக்களையும் அவர் பெற்றுள்ளார் என்பதை திரு.திருமாவளவன் மறந்துவிடக்கூடாது என்று உபதேசிக்கும் அளவிற்கு தற்போது சகோதரர் நடந்துகொள்வது மிக வருத்தத்திற்குறியதாக காணப்படுகின்றது.
ஏனெனில் தனது கட்சியில் 200 நபர்கள் சீட்டு கேட்கின்றார்கள் என்றும் பலநூறு நபர்கள் 5000 ரூபாய் டெபாசிட் செய்து வேட்பாளராக நிற்கும் அளவிற்கு வந்துவிட்டார்கள் என்றும் கூறுவது தொள்.திருமாவளவனுக்கு பெருமையளித்தாலும் இப்படி பொதுவெளியில் இத்தனை நபர்கள் சீட்டுகேட்கிறார்கள் ஆனால் அதனை என்னால் கொடுக்கமுடியவில்லை, அதனால் சிலர் என்மீது கோபித்துக்கொள்கிறார்கள் அல்லது என்னை எதிரியாக பார்க்கின்றார்கள் என்றும் உலறுவது ஒரு சிறந்த தலைவனுக்கான அடையாளமல்ல என்பதை சகோதரர் தொள்.திருமாவிற்கு நினைவூட்டும் அளவிற்கு ஆழ்ந்த குளப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார் என்றே அறியப்படுகின்றது.
அவ்வாறே எல்லா கட்சியிலும் எல்லோரும் சட்டமன்றத்தில் உட்கார அல்லது அப்பதவியை பெற ஆசைப்பட்டு வாய்ப்புக்கள் கேட்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனைவரும் கேட்கின்றார்கள் என்பதற்காக அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த நினைத்தால் தமிழகத்தில் உள்ள 90% மக்களை சட்டமன்றத்திற்குள்தான் வைத்திருக்கவேண்டும் என்ற நிதர்சனம்கூடவா திருமாவிற்கு தெரியாமல் போய்விட்டது என்பது உண்மையில் ஆச்சர்யமாகவே உள்ளது.ஆக விசிக கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவன் தற்போதைய நிலையில் இவ்வாறு செயல்படுவதற்கான சில உலவியல் காரணங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.அவற்றை இக்கட்டுரையில் முடிந்தளவு சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிவுசெய்ய விரும்புகின்றேன். இக்கட்டுரை நிச்சயம் அவருக்கும் அரசியல் சார்ந்த ஏனைய தோழர்களுக்கும் மிகச்சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.நீங்களும் வாசித்து பயன்பெற்று ஏனைய நண்பர்களையும் பயன்பெறச்செய்யுங்கள்.
தொள்.திருமாவளவனின் அரசியல் சுருக்கம்.
தலித் மக்களின் உரிமைகளை காக்கவும்,சாதி ஒழிப்பு மற்றும் தமிழ்தேசியத்தை நோக்கமாகக் கொண்டு 1990-களில் தலித் பேந்தர்ஸ் என்ற இயக்கமாக தொடங்கி 1999-களில் அரசியல் கட்சியாக உறுவாகி கூட்டணி வியூகங்களின் மூலம் சட்டமன்றத்திலும், நாடாலுமன்றத்திலும் தன்னை பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு கட்சியை தமிழகத்தில் தொள்.திருமாவளவன் தலைமைதாங்கி வழிநடத்திவருகின்றார்.
1999 தொடங்கி தற்போது 2026 வரையிலும் பல்வேறு கட்சிகளுடன் அவர் கூட்டணி வைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாக செயல்பட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாலுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டு சில சமயங்களில் தோல்விபெற்றும் சிலசமயங்களில் வெற்றிபெற்றும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சென்றிருக்கின்றார்கள்.இவற்றிற்கு மத்தியில் தனது விசிக கட்சிக்காக சில கூட்டணி கட்சிகளிடம் ஒரு சீட்டு முதல் 25 சீட்டுகள் வரைக்கும் சட்டமன்ற தொகுதிகளாக பெற்று ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாமலும் இருந்திருக்கின்றார்கள்.
இத்தகைய நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தற்போதைய 2026 - சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுக வுடன் கூட்டணி வைத்துள்ளார்.அதன் அடிப்படையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் விசிகவிற்கு 8 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 10 இடங்களுக்கு பதிலாக 8 இடங்களையே பெற்றது,மற்றும் தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காதது போன்றவை திருமாவளவனுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதாக ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.அத்தோடு தங்களுக்கு கிடைத்த அந்த எட்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளோடு இணைந்து தனது வேட்பாளர்கள் களப்பணியாற்றி வெற்றிபெறவேண்டும் என்பதையும் தனது தொண்டர்களுக்கு காணொளி காட்சியின் மூலம் வழிகாட்டுதலும் வழங்கியுள்ளார்.
வேறு என்னதான் பிரச்சனை?
மேற்கூறியவற்றோடு திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டை முடிந்திருந்தால் கூட்டனிக்குள் எவ்வித பிரச்சனையும் இல்லை.ஆனால் அத்தோடு சில குளறுபடிகளையும் அந்த காணொளியில் அவர் முன்வைத்திருப்பதே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இவ்வேலையில் மிகப்பெரும் சர்ச்சையாக பார்க்கப்படுகின்றது.அதாவது தன்னுடைய மீதமுள்ள 3 ஆண்டு கால நாடாளுமன்ற உறுப்பினர் பதைவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திற்காக போட்டிபோட வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்ற கேள்விக்கு தன் கட்சியை தமிழகத்தில் வளர்க்கவேண்டியுள்ளது என்பதற்காக வருகின்றேன் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வரும் காலங்களில் மாநில அரசியல் பெரும் மாற்றங்களை காண இருப்பதாகவும் அவற்றை சமாளிப்பதற்குத்தான் அவர் மாநில அரசியலுக்குள் திடீரென குதித்ததாகவும் கூறினார்.
ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு இப்பொழுது இங்கு எல்லாம் சரியாகத்தான் உள்ளது.எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரும் வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறும்.நான் பதவிக்கு எப்பொழுதும் ஆசைபட்டவனல்ல.எனவே இப்பொழுது நான் போட்டியிடப்போவதாக கூறிய காட்டுமன்னார்கோயிலை மற்றொரு நபருக்கு விட்டுக்கொடுக்கின்றேன் என்பதாக ஒரு பத்திரிக்கை கூட்டத்தை கூட்டி தனது உள்ளுணர்வை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்த தடுமாற்றம்?
அடிப்படையில் திருமாவளவனுக்கு எதிர் திசையான பாஜக, இந்த தேர்தலுக்கு பிறகு தமிழகத்தை கபலிகரம் செய்துவிடுமோ என்ற நெருடல் நீண்ட காலமாக இருந்துவருகின்றது அல்லது அப்படி அவர் காட்டிக்கொண்டிருக்கின்றார். தற்பொழுது அவற்றிற்குள் தாங்களும் கூட்டணியோடு சேர்ந்து சிக்கிவிடுவோமோ என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது.அதற்கேற்றவாரு பாஜகவும் தமிழகத்தில் எப்படியாவது காலூன்ட வேண்டும் என்ற முயற்சியில் தங்களின் கூட்டணியை பலப்படுத்தி வருகின்றது.இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கான சக்தியாக நம்முடைய கூட்டணி ஒருவேலை இருக்குமா? அல்லது தானே அந்த இடத்தில் இருந்து செயல்படலாமா? என்பது போன்ற பல்வேறு குழப்பத்திற்குள் தொள்.திருமா தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் பாஜகவின் பல்வேறு சூழ்சிகளையும் முறியடிப்பதற்காகத்தான் இந்த மதச்சார்பற்ற கூட்டணியே உறுவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்ற அடிப்படையை சகோதரர் திருமா மீள்பார்வை செலுத்த தவறியிருக்கின்றார் என்பதுதான் இங்கு வெட்டவெளிச்சமாக காணப்படுகின்றது.பாஜகவோடு கூட்டணி வைக்கக்கூடாது என்ற எண்ணத்தில்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குள் அவர் வந்திருக்கின்றார் என்பதையே அவருக்கு நினைவூட்டும் அளவிற்கு அவர் மிக தடுமாற்றத்தில் இருந்து வருகின்றார்.இதன் அடிப்படையில் அவர் தற்போது இரண்டு பெரும் உலவியல் பிரச்சனையில் இருப்பதாகவே என்னால் கண்டுகொள்ள முடிகின்றது.
ஒன்றாவது, கூட்டணி கட்சியான திமுக அல்லது அதுபோன்ற எந்த கட்சிகளுடனும் கூட்டணியில் இருப்பது அவருக்கு விருப்பமற்றதாக தெரிகின்றது.அதாவது கூட்டணியின்றி சுதந்திரமாக செயல்படுவதை அவர் விரும்புகின்றார் அல்லது அவரை அதனின் பக்கம் யாரோ செலுத்த தூண்டுகிறார்கள் என்றும்கூட வைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது, அவர் தன்னுடைய கட்சியில் உள்ள வேட்பாளர்களை அளவுகடந்து நேசிப்பதால் சற்று சந்தேகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தீர்வுதான் என்ன?
தற்போதைய நிலையில் திரு.திருமாவளவனிடம் மேற்கூறிய இரண்டு உலவியல் போராட்டங்களும் மிகைத்திருப்பதாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் கூட்டணியில் தங்களால் முழு சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலை பெரும்பாலும் தொள்.திருமா சந்தித்து வருவதாகவே பல்வேறு சமயங்களிலும் வெளிப்படுத்திவருகின்றார்.எனவே இந்த சமயமும் தங்களுக்கு விருப்பமான தொகுதி கிடைக்கவில்லை என்பதனாலும் தாங்கள் விரும்பிய எண்ணிக்கையில் தொகுதி கிடைக்கவில்லை என்பதனாலும் ஒரு விரக்திக்குள் தள்ளப்பட்டுள்ளார்.மேலும் கூட்டணியின்மையை அவரது அல்லது அவரது கட்சியின் அடுத்த கட்ட நகர்வாக சிந்திக்கவும் தொடங்கியுள்ளார்.உண்மையில் இத்தகைய சிந்தனை அவருக்கு நினைத்தது போன்ற முடிவையும் தரலாம் அல்லது நினைத்துப்பார்க்க முடியாத வீழ்ச்சியையும் தரலாம் என்பதை முதலில் கருத்தில்கொள்ள வேண்டும் என்பதை இங்கு பணிவன்போடு பதிவுசெய்துகொள்கின்றேன்.
ஏனெனில் அவர் தனி கட்சியும்,தனி சின்னமும் வைத்துள்ளார் என்றாலும் தனித்து கட்சியாக தேர்தலில் போட்டியிடும்பொழுது அதன் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அவர் கருத்தில்கொள்ள தவறினால் ஏனைய கட்சியினர் எப்படி பல்வேறு தடுமாற்றங்களாலும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற பேராசையாலும் ஒன்றுமில்லாமல் நிற்கின்றார்களோ அந்த நிலை தனக்கும் வரலாம் என்பதை ஒரு கனம் சீர்தூக்கிப்பார்க்கவேண்டும்.அப்படி முன்பு சீர்தூக்கிப்பார்த்ததின் விளைவுதான் தற்போது தான் இருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெளிப்பாடாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் எப்படி திமுகவுடன் கொள்கை நண்பர்களாக கூட்டணியில் இணைந்து இருக்கின்ராறோ அதே நிலையில் அதன் உறவை கடைபிடிப்பதுதான் அவருக்கும் அவரது கட்சியினருக்கும் தமிழகத்தில் சிறந்த அந்தஸ்த்தை தரும் என்பதை மறந்துவிடக்கூடாது.இதைவிடுத்து தனது உள்ளுணர்வு மற்றும் தனது கட்சிகாரர்களின் தூண்டுதல்களுக்காக கூட்டணியின் மீது சந்தேகிப்பதோ அல்லது அவற்றின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடுவதோ அவரின் சிறந்த தலைமைப்பன்பை பால்படுத்தும் முயற்சியாகிவிடும் என்பதை தலைவர் திருமா கவனத்தில் கொள்ளவேண்டும். என்னதான் ஆயிரம் முறை மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே இந்த முறை முந்தைய சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு நான் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறினாலும்.தனது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியோடு அதிகம் ஐக்கியமாகிவியிருக்கின்றார்கள் என்ற புறத்தோற்றத்தால் தனது பேச்சை அவர்கள் கேட்காமாட்டார்கள் என்றோ அல்லது தனக்கு எதிராகவே செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள் என்றோ தனக்குத்தானே யூகித்துக்கொள்வது அல்லது பிற நபர்களின் தூண்டுதலுக்கு ஆளாவது மிகப்பெரும் பலவீனம் என்பதை தலைவர்.திருமா அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவ்வாறே தனது வேட்பாளர்கள் எல்லை மீறுகிறார்கள் என்பது தெரியவந்தால் அவர்களை அன்போடு பக்குவப்படுத்தி முடிந்தளவு தனக்கு பலமாக தன்னோடு வைத்துக்கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்த தலைமைத்துவமாக இருக்குமே தவிர அதைவிடுத்து அறியாமையில் அவர்கள் செய்த ஏதோ ஒன்றுக்காக தான் உறுவாக்கிய அல்லது வார்த்தெடுத்த தோழர்களை மிக இலகுவாக தட்டிவிட்டுவிட்டு செல்ல முற்படுவது நல்ல தலைமையில் ஏற்பட்டுள்ள மோசமான தடுமாற்றமாகவே பார்க்கப்படும் என்பதை தலைவர்.திருமா மறந்துவிடக்கூடாது.மேலும் அத்தகைய தடுமாற்றம் மிகப்பெரும் நஷ்டங்களை இழுத்துவந்து தந்துவிடும் என்பதையும் இங்கு பதிவு செய்ய நான் கடமைபட்டிருப்பதாக உணர்கின்றேன்.
உண்மையில் மக்களை வெற்றிபெறும் மேலும் மக்களுக்காக பணியாற்றும் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களை உறுவாக்குவது சாதாரண விஷயமல்ல. அவர்களை முடிந்தளவு தன்னிடம் தக்க வைத்துக்கொள்வதற்குத்தான் ஒரு நல்ல தலைவர் முயற்சிக்க வேண்டுமே தவிர அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது ஓரம்கட்டும் நடவடிக்கையிலோ இறங்கிவிடக் கூடாது என்பதில் தலைவர்.திருமா மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருனமாகவே இதை நான் காண்கின்றேன்.
ஒருவேலை அவர்கள் நடந்துகொள்ளும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்கள் கூட்டனி கட்சியோடு நெருக்கமாக இருப்பது சரியாகபடவில்லையென்றாலோ அதனை அழகாக சுட்டிக்காண்பித்து சகோதரத்துவத்தோடு அவர்களை சரிசெய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது என்பதை தோழர் திருமா அவர்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் பணிவோடு சுட்டிக்காண்பித்துக் கொண்டு எல்லாம் வல்ல இறைவன் இந்த பூமியில் சிறந்த ஆட்சியையும் சிறந்த ஆட்சியாளர்களையும் நிலைத்திருக்கச்செய்து இந்த பூமியை அமைதிப்பூங்காவாக அமைய அருள்செய்வானாக என்று என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி:
Author.A.Sadam husain hasani









.webp)

