திங்கள், 13 செப்டம்பர், 2021

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்?

வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்
வெற்றியில் நிலைத்திருக்க என்ன செய்யவேண்டும்

முன்னுரை:

இன்றைக்கு வெற்றியாளர்கள் வெற்றிஅடைந்துகொண்டே செல்வதற்கு காரணம் என்னவென்று நம்மில் பலரும் யோசிப்பதுன்டு.அத்தோடு மன ஆறுதலுக்காக அவர்களுக்கு அதுவெல்லாம் அதிஷ்டமாக கடவுள் கொடுத்தது, நாமெல்லாம் அதற்கு கொடுத்துவைக்கவில்லை அவ்வளவுதான் என்று நமக்குள் நாமே கூறிக்கொண்டு நமது மனதை தேற்றிக்கொள்ளவும் செய்து கொள்பவர்களே அதிகம்.ஆனால் உண்மை அவ்வாறல்ல.வெற்றியாளார்கள் தோல்வியாளர்கள் செய்கின்ற ஒருசில செயல்களை ஒருபோதும் தன் வாழ்வில் செய்வதே இல்லை என்பதே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.எனவே இந்த கட்டுரையில் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத சில விஷயங்களை குறிப்பிட்டுக்காட்டுகின்றேன்.முடிந்தால் நீங்களும் அதனை செய்வதை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.நிச்சயமாக நீங்களும் எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே நீடிக்க முடியும்.

வெற்றியாளார்கள் வாழ்வில் செய்யவே விரும்பாத 6 விஷயங்கள்.

1.கொண்ட கொள்கையை ஒருபோதும் கைவிடுவதில்லை.

1.தனக்கு சரி என்றோ அல்லது தன்னால் ஒன்றை செய்யமுடியும் என்றோ அவர்கள் உணர்ந்துவிட்டால் அதனை யாருக்காகவும் செய்யாமல் இருப்பதை அவர்கள் விரும்புவதே இல்லை.அக்காரியம் அவர்களுக்கு எத்துனை கடினமாக இருந்தாலும் அதனை மனமுவந்து ஏற்றுக்கொள்வார்கள்.அவ்வாறே அதற்கு எதிராக எத்துனை தடைகள் வந்தாலும் அவற்றைக்கண்டு ஓடிவிடாமல் அதற்கு தீர்வு காணவே முற்படுவார்கள்.இத்தகைய மனோபாவமே அவர்களை எல்லாக்காலங்களிலும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு முக்கிய காரணியாக இருந்துவிடுகின்றது.

2.நேரத்தை வீணாக்குவதில்லை.

தன் ஆற்றலை வீணான காரியங்களுக்காக செலவழிப்பதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.எச்செயலால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் அறிவார்களோ அவற்றைவிட்டும் மிக தூரமாக இருப்பதே அவர்கள் எக்காலமும் வெற்றியாளார்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

3.தற்பெருமை கொள்வதில்லை.

தன் துறையில் எல்லாமே தனக்கு தெரியும் என்று காட்டிக்கொள்வதை அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.தன் துறை சம்மந்தமான அதிகமான தேடலிலேயே இருப்பதால் அவரகள் கல்வியை தேடும் சாதாரண மனிதனாகவே பெரும்பாலும் தங்களை காட்டிக்கொள்ள விரும்புகின்றனர். இத்தகைய பண்பே அவர்களை எல்லா காலமும் வெற்றியாளராக இருப்பதற்கான மிகமுக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

4.நிராகரிப்பிற்கும்,தோல்விக்கும் அஞ்சுவதில்லை

நிராகரிப்புகளையும்,இழப்புகளையும்,தோல்விகளையும் கண்டு ஓய்ந்து போய்விடுவதை அவர்கள் தங்கள் வாழ்வில் ஒருபோதும் விரும்புவதில்லை. துன்பங்களுக்கே துன்பம் கொடுக்கும் அளவிற்கான மனோ தைரியம் கொண்டவர்களாக அவர்கள் காணப்படுவார்கள்.அத்தகைய பண்பே எப்பொழுதும் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

5.எதிர்மறை எண்ணங்களுக்கு இடமளிப்பதில்லை.

எதிர்மறையான எண்ணங்களுக்கும்,எதிர்மறையாக பேசுபவர்களுக்கும் அவர்கள் ஒருபோதும் மதிப்பளிப்பதே கிடையாது.ஒரு காரியத்தை நேர்மறையாக யோசித்து அதனை சீராக செய்யமுடியும் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டால் அவற்றைப்பற்றி யார் எதிர்மறை கருத்துக்களை கூறினாலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு அவற்றில் வெற்றி காணும் பக்குவமுடையவர்களாக இருப்பார்கள்.இத்தகைய உறுதிமிக்க பண்பே அவர்கள் எப்பொழுதும் வெற்றியாளர்களாக இருப்பதற்கான முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

6.தன்னை நம்பியோர்களை ஏமாற்றுவதில்லை.

6.தன்னோடு இருப்பவர்களையும்,தன்னை நம்பி வருபவர்களையும் ஏமாற்ற வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.தன்னுடைய நேர்மை என்பதில் துளியளவும் குறைவு செய்யக்கூடாது என்பதில் மலையளவு உறுதியாக இருப்பார்கள்.இதனால் தன்னை நம்பும் அனைவருக்கும் மதிப்பளித்து அவர்களை கண்ணியப்படுத்துபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.இத்தகைய பண்பே அவர்களை எப்பொழுதும் வெற்றியாளர்களாகவே வைத்துவிடுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றது.

ஒரு வெற்றியாளார் செய்யவே விரும்பாத முக்கிய பண்புகளில் இந்த ஆறு பண்புகள் மட்டுமே பிரத்தியேக இடம் பெற்றிருக்கின்றது என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் பதிவிட்டிருக்கின்றேன்.நீங்களும் வெற்றியாளராக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினால் கட்டாயம் ஒரு நல்ல வெற்றியாளர் விரும்பாத இந்த ஆறு பண்புகளையும் உங்களைவிட்டும் நீக்கிக் கொள்ளுங்கள்.நிச்சயம் நீங்களும் வெற்றியாளராக நீடித்திருக்க முடியும் என்றே நான் ஆதரவு வைக்கின்றேன்.!

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது?

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது
ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது

முன்னுரை:

ஒரு புத்தகத்தை எவ்வாறு படிப்பது என்று கேட்கும் அனைவரிடமும்"நீங்கள் ஏன் புத்தகம் படிக்கபோகின்றீர்கள் என்று கேட்பது என்னுடைய வழக்கமாகும்.ஏனெனில் என்னைப் பொறுத்தமட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது எப்படி என்பது அவரவர்களின் நோக்கங்களை பொறுத்தே அமைகின்றது என்பதாக கருதுகின்றேன்.மேலும் இன்றைய புத்தக வாசிப்பாளர்களை பல வகையினராக பிறிக்க முடியும் என்றாலும் அவர்களில் சில வகையினரை மட்டும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

வாசிப்பாளர்களின் வகைகள்:

1.நல்ல நண்பனாக நினைத்து படிப்பவர்கள்.

இந்த வகையினரில் நிச்சயமாக நானும் ஒருவனாக இருக்கின்றேன் என்பதை முதலில் நான் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொண்டு இந்த சாரார்கள்தான் புத்தகமே தேடும் நபர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.இவர்கள் புத்தக காதலர்கள் என்பதால் எத்தகைய புத்தகங்களை நீங்கள் இவர்கள் கையில் கொடுத்தாலும் அதை ஒரு சில மனித்துளிகளில் அதனுடைய மொத்த சாராம்சத்தையும் விளக்கிவிடுவார்கள்.

இவர்களுக்கு புத்தகத்தை படிப்பதற்கான எந்த வறைமுறையும் அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஏனென்றால் இவர்கள் இருளிலும் படிப்பார்கள், வெளிச்சத்திலும் படிப்பார்கள்.தனிமையிலும் படிப்பார்கள், கூட்டத்திலும் படிப்பார்கள்.ஆகவே இவர்களுக்கு படிப்பதை கற்றுக்கொடுக்க எந்த தேவையும் இல்லை என்பதால் நாம் அடுத்த வகையினரை பார்ப்பதே சிறந்தது என்று கருதுகின்றேன்.

2.அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக படிப்பவர்களாக இருந்தால் குறிப்பிட்ட உங்கள் துறை சார்ந்த புத்தகங்களை படிப்பதே மேலானதாகும். உதாரணமாக நீங்கள் அறிவியல் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அறிவியல் சார்ந்த புத்தகங்களையே தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.அதைவிடுத்துவிட்டு வரலாறோ அல்லது புவியியலையோ படிப்பீர்களேயானால் உங்களுடைய புத்தகம் படிக்கும் ஆசை உங்களைவிட்டும் மிக விரைவில் சென்றுவிடும் என்பதே நிதர்சனமான உலவியல் சார்ந்த உண்மையாகும்.

"அப்படியானால் வெவ்வேறு துறைகளின் புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்று கேட்பீர்களேயானால் அங்குதான் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்க விரும்புகின்றேன்.அதாவது உங்களுடைய அறிவுத்தேட்டம் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதை பொறுத்துத்தான் உங்களுடைய புத்தக வாசிப்பும் தொடரும் என்பது எனது கருத்தாகும்.உங்களால் பல் துறைகளின் புத்தகங்களை நிச்சயமாக வாசித்துவிட முடியும் என்றாலும் அதில் உங்களுடைய அறிவு தேடல் என்பது எவ்வளவு இருக்கின்றது என்பதை பொறுத்தும் நீங்கள் அத்துறையில் முன்பே எவ்வளவு அடிப்படையாக அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பதை பொறுத்துமே உங்களுடைய வாசிப்பிற்கான பலனை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

எனவே அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் புத்தகம் வாசித்தால் முடிந்தளவு நீங்கள் உங்கள் துறை சார்ந்த புத்தகத்தை வாசியுங்கள்.அல்லது நீங்கள் படிக்கும் அப்புத்தகம் ஒரு துறையின் அடிப்படையான அறிவை போதிக்கும் புத்தகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் புத்தகம் வாசிப்பதைவிட அதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்கின்றோம் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் நீங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்காக படிப்பதால் பெரும்பாலும் அமைதியான இடங்களை தேர்ந்தெடுப்பதே உங்களுக்கு  சிறந்ததாகும். ஏனெனில் புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது அதனை சிந்தனையில் செலுத்தும்பொழுதோ வேறு சில இடையூறுகள் இருந்தால் அது நம்மை ஆரோக்கியமாக புரிந்து கொள்வதை விட்டும் தடுத்துவிட அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.எனவே சிந்தித்து உணர வேண்டிய புத்தகங்களை பெரும்பாலும் தனிமையில் அமர்ந்து படித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறே குறிப்பிட சில பக்கங்களை படித்துவிட்டால் சற்று நேரம் படிப்பதை நிறுத்தி படிப்பதற்கு ஓய்வுவிடுங்கள்.அச்சமயம் அமைதியாக அமர்ந்து அது சம்மந்தமாக சிந்தித்துப்பாருங்கள்.அது உங்களுக்கு புதிய பல தீர்வுகளை அளிக்கக்கூடும் என்பது எனது நம்பிக்கையாகும்.

3.ஆழமான ஞானம் பெறுவதற்காகவோ அல்லது மன அமைதிக்காகவோ படிப்பவர்கள்.

நீங்கள் ஆழ்ந்த ஞானம் படைக்க வேண்டுமெறோ அல்லது உங்கள் மனதை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்றோ நினைத்தால் நீங்கள் பைபிள்,அல்லது குரான்,அல்லது பகவத் கீதை போன்ற புனித நூல்களை வாசிப்பது சிறந்ததாகும்.ஏனெனில் பெரும்பாலும் மத நூல்கள் பல்வேறு வாழ்வியல் நெறிகளை மிக அற்புதமாக போதிக்கின்றது என்பதே எனது கண்ணோட்டமாகும்.அவ்வாறே அந்த புத்தகங்களை உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ ஒன்றாக அமர்ந்து வாசிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அதாவது ஒருவர் வாசித்து அனைவரும் செவிமடுப்பது அதனை புரிந்து கொள்வதற்கும் மேலும் வாழ்வில் அனைவரும் கடைபிடிப்பதற்கும் மிக இலகுவானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.இத்தகைய முறையயே நாங்கள் எங்கள் குடும்பத்தாருடன் கடைபிடித்துவருகின்றோம் என்பதால் அதனையே உங்களுக்கும் நான் முன்மொழிகின்றேன்.

4.ஒரு மொழியை கற்பதற்காக படிப்பவர்கள்.

நீங்கள் ஒரு மொழியை கற்பதற்காக புத்தகங்களை படிப்பவராக இருந்தால் இன்று பல்வேறு மொழிப்புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன.மேலும் அவற்றை ஒரு சில நாட்களிலேயே கற்றுவிடும் அளவிற்கு கூட மிக எளிய வடிவில் தொகுக்கப்படுகின்றன.எனவே நீங்கள் மொழியை கற்பதற்காக படிப்பவராக இருந்தால் இரண்டு அடிப்படையான புத்தகங்களை நீங்கள் நிச்சயம் வாசித்தாக வேண்டும்.

ஒன்று அந்த மொழி சார்ந்த இலக்கண இலக்கிய சட்டங்கள் பொதிந்த புத்தகங்கள்.இரண்டாவது அந்த மொழியின் வார்த்தைகள் தொகுக்கப்பட்ட அகராதிகள்.இவை இரண்டையும் நீங்கள் தொடந்து வாசித்து வந்தால் மட்டுமே ஒரு மொழியில் உங்களால் தேர்ச்சி பெறமுடியும் என்று நான் கருதுகின்றேன். அவ்வாறே இதனை மிக ஓர்மனதோடு மனதில் பதியவைக்கவேண்டிய அவசியம் இருப்பதால் காலை பொழுதுகளில் அமைதியான சூழலில் கற்பது சிறந்தது என்றே நான் கருதுகின்றேன்.

5.வாசிப்பது நல்ல பழக்கம் என்பதற்காக வாசிப்பவர்கள்.

வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் அதனை உங்கள் வாழ்விலும் அமைத்துக் கொள்வதற்காக நீங்கள் புத்தகங்கள் வாசிப்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் நீங்கள் மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் அல்லது தினசெய்தித்தாள்கள் வாசிப்பதே போதுமானது என்று நான் கருதுகின்றேன்.அப்படி அதுவும் போதவில்லையானால் வெற்றியாளர்களின் வரலாறுகள் அல்லது பொதுவான ஏதேனும் கதைகளை வாசிப்பது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனது பரிந்துரையாகும்.

வாசிப்பதை வெறும் பழக்கமாக மட்டுமே ஆக்கிக்கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்.ஏனெனில் வெறும் சடங்கிற்காக படிக்கும் பொழுது பெரும்பாலும் நமக்கு மிக கவனம் என்பது அவசியமில்லை.

6.பொழுது போக்கிற்காக படிப்பவர்கள்.

பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் த்ரில்லர் புத்தகங்கள் அல்லது தொடர் கதைகள் படிப்பது மிக பிரயோஜனமாக இருக்கும்.ஏனென்றால் அவைகள் நம்முடைய மூளைக்கு பல சுவாரஸ்யங்களையும்,எதிர்பார்ப்புகளையும் கூட்டி ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

எனவே பொழுது போக்கிற்காக புத்தகங்கள் வாசிப்பவர்கள் உதாரணமாக பயணத்தில் செல்லும் பொழுது பேருந்திலோ அல்லது ரயிலிலோ புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்  நாவல் அல்லது த்ரில்லர் கதைகளை படிப்பதே சிறந்தது என்பதாக நான் கருதுகின்றேன்.அவ்வாறே அதனை உங்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கவும் முடியும்.

ஆக இந்த ஆறு வகையான புத்தக வாசிப்பாளர்களையே நம்மால் பெரும்பாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அவற்றை மட்டுமே இங்கு நான் குறிப்பிட்டு இருக்கின்றேன்.அடுத்தபடியாக ஒரு புத்தகத்தை நாம் எவ்வாறு அணுகுவது என்பதையும் சுறுக்கமாக விளக்கிவிட விரும்புகின்றேன்.

 ஒரு புத்தகத்தை எவ்வாறு அணுகுவது.?

1.புத்தகங்கள் வாசிப்பதில் நீங்கள் புதியவர்களாக இருந்தால் முடிந்தளவு அடிப்படை உங்களுக்கு முன்பே கொஞ்சம் தெரிந்த விஷயத்தையே ஒரு புத்தகத்தில் படிக்க முயலுங்கள்.அது உங்களுடைய புத்தக வாசிப்பின் ஆர்வத்தை போக்கிவிடாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்.அப்படி ஒரு வேளை அத்துறையை படித்தே ஆக வேண்டும் என்று விரும்பினால் முதலில் அது சம்மந்தமான அடிப்படை விஷயங்களை கொண்ட புத்தகங்களை வாசியுங்கள்.பிறகு ஆய்வு புத்தகங்களை வாசிப்பது மிக இலகுவாகிவிடும். 

2.புரிவதற்கு மிக கடினமான நீண்ட ஆய்வு புத்தகங்களை எந்த அடிப்படையும் தெறியாமல் வாசிக்காதீர்கள்.ஏனெனில் அது உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்கு சமமாகும்.

3.ஒரு மொழியை கற்பதற்காக ஒரு மொழியில் உள்ள மிகக்கடினமான ஆய்வு புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் அது உங்களுக்கு பல குழப்பங்களையே கொடுக்கும்.

4.ஒரு துறையில் நீங்கள் மிக அனுபவம் மிக்கவராக இருந்து கொண்டு அத்துறை சார்ந்த ஆரம்ப அடிப்படைகள் சார்ந்த புத்தகங்களை வாசிக்காதீர்கள்.அதுவும் உங்களுடைய நேர வீணடிப்பாகவே அமையும் என்றே நான் கருதுகின்றேன்.இதுவே ஒரு நல்ல புத்தக வாசிப்பாளர் ஒரு புத்தகத்தை அணுகும் சிறந்த முறையாக நான் கருதுகின்றேன்.முடிந்தால் நீங்களும் கடைபிடியுங்கள்..!தொடர்ந்து வாசிக்க அமேசானில் எனது புத்தகம் இடம்பெற்றுள்ளது.அதனை பெற்று வாசித்து பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்
நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நிலைத்துநிற்பதே வெற்றியை தரும்

நீங்கள் அடையவிரும்பும் லட்சியத்தை எப்படி அடைவது என்று யோசித்துக்கொண்டே இருக்கின்றீர்களா?அல்லது ஒரே நாளில் ஏன் நம்மால் அதனை அடைய முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றீர்களா..?உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான இலகுவான ஒரு வழியை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.முடிந்தாள் கடைபிடியுங்கள் நிச்சயமாக உங்கள் லட்சியத்தை அடைந்துவிடலாம்.

நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள்.எவ்வளவு தூரம் நடந்தீர்கள் என்றோ அல்லது உங்கள் தூரத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்றோ யோசிக்கவே செய்யாதீர்கள்.உங்கள் கால்கள் வலிதரும் அளவிற்கு நடந்து கொண்டே இருங்கள்.பிறகு மறுநாளும் அதனைப்போன்றே செய்யுங்கள்.இப்படி உங்கள் லட்சியப்பாதையில் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ நடந்து கொண்டே இருங்கள்.எக்காரணத்திற்கும் நேற்றைய நிலையிலேயே இன்றைக்கும் அமர்ந்துவிடாதீர்கள்.இப்படி ஒவ்வொரு நாளும் செய்து வாருங்கள் உங்கள் லட்சியப்பயணம் எங்கு சென்று முடிய வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை அறியாமலேயே உங்களை அது கொண்டு சேர்த்துவிடும்.

இந்த வழிமுறையானது யார் தன் லட்சியப்பயணத்தை தொடங்கிய பின்பு அது எப்பொழுது முடியும் என்றோ அல்லது தனக்கு ஏன் இன்னும் அந்த லட்சியம் கிட்டவில்லை என்றோ தன்னைத்தானே சந்தேகிப்பார்களோ அவர்களுக்கு மிகச்சிறந்த வழிமுறையாகும்.இதை இங்கு ஏன் குறிப்பிட்டுக் காட்டுகின்றேன் என்றால் நம்மில் பலரும் ஒரு காரியத்தை மிக வீரியமாக ஆரம்பித்து விடுகின்றோம்.ஆனால் அதிலிருந்து உடனே பலன் கிடைக்கவில்லை என்பதால் ஒருசில தினங்களிலேயே அதனை அப்படியே விட்டொழித்து விடுகின்றோம்.அல்லது ஒரே சமயத்தில் அதனை முயற்சித்துவிட்டு பிறகு அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம்.

அதனை போக்குவதற்கு நான் மேலே குறிப்பிட்டுக்காட்டிய அந்த வழியே மிக உதவியாக இருக்கும்.ஏனென்றால் யார் ஒன்றை அடைய வேண்டுமென்று ஆரம்பம் செய்து அதில் நிலைத்திருக்கவும் செய்துவிடுகின்றாரோ அவர் என்றாவது ஒருநாள் அதனை அடைந்துவிடுவதே இயற்கையின் அமைப்பாக இருக்கின்றது.அதில் அவர் தன் பயணத்தை எவ்வளவு குறைவாக அமைத்திருந்தாலும் அதனை விடாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததின் விளைவாக  ஒருநாள் அதனை அவர் மிக இலகுவாக அடைந்துவிட அதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.

எனவே நீங்களும் உங்கள் லட்சியத்தை இலகுவாக அடையவேண்டும் என்று விரும்பினால் அதனை உங்கள் வாழ்வில் அன்றாடம் நிலையாக செய்யும் காரியமாக மாற்றிக்கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் அந்த காரியம் குறைவாக இருந்தாலும் சரியே.அதனை தொடர்ந்து செய்து வருவதில் நிலைத்திருங்கள்.நிச்சயம் ஒருநாள் அது பெரும் வெற்றியாக உங்களை வந்தடைய உங்களின் அந்த சிறிய நகர்வே காரணமாக அமைந்துவிடும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.
பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்.

முன்னுரை:

உலக நாடுகளெல்லாம் விண்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத்தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப்பற்றிப்பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த சமூகத்திற்கு நேரிட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன். மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும்,மனரீதியிலும்,பொருளாதார ரீதியிலும்,பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில்தான் இன்றுவரை இருக்கின்றாள் என்பதாகவே நான் பார்க்கின்றேன்.

அவளை மீண்டும் மீட்டு எடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதலபாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணரமுடிகின்றது.இத்தகைய பெண் அடிமைத்தனம் சம்மந்தமாக"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற எனது சிறிய புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கின்றேன். அவற்றின் ஒரு சிறிய பகுதியயை மட்டும் இந்த கட்டுரையில் பதிவுசெய்கின்றேன்.இந்த கட்டுரையில் பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும் எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.

இதனை படிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையை உங்களுக்கு அற்பணம் செய்கின்றேன்.நீங்களும் ஒரு இனத்திற்கு எதுரான இந்த சமூகத்தின் மிகக்கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக்கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

பெண் அடிமைத்தனம்:

1.வெளியில் செல்லும் பெண்கள் தவறானவர்கள் என்று சித்தரிப்பது.

வேலைக்காகவோ அல்லது தனது தேவைக்காகவோ அல்லது இந்த உலகை ரசிக்கவேண்டும் என்ற தனிப்பட்ட ஆசைக்காகவோ வெளியில் செல்லும் பெண்களின் நடத்தையை தவறாக சித்தரிக்கும் கண்ணோட்டம் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த சமூகத்தில் புரையோடிப்போய்தான்  கிடகின்றது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.என்னதான் பெண்கள் தைரியமாக வெளியில் வந்து வேலை செய்யத்துவங்கிவிட்டனர் என்று போலியாக சமூகத்திற்கு முன்பு மார்தட்டிக்கொண்டாலும் இந்த சமூகம் அவர்களை புறக்கணிப்பதையே வரவேற்கின்றது என்பதையே நிதர்சனமான உண்மையாக நான் காண்கின்றேன்.

உண்மையில் இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியேறிவிட்ட ஒரு பெண் எங்காவது யாராவது ஒருவரால் அவளுடைய நடத்தையாள் சந்தேகிக்கப்படுகின்றாள் என்பதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?ஒருபோதும் முடியாது..!ஏனென்றால் ஒரு பெண் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால் அவள் சந்தேகத்திற்குறியவள் என்று இந்த சமூகம் ஒரு அவளம்நிறைந்த பார்வையை கட்டமைத்து வைத்திருக்கின்றது.மேலும் வீட்டின் உள்ளே இருந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பணிவிடை செய்வதுதான் ஒரு பெண்ணிற்கான சிறந்த இலக்கணம் என்பதாகவும் அது வெளிப்படையாகவே வலியுறுத்திக்கொண்டுமிருக்கின்றது.

அதற்கு தோதுவாக முந்தைய வழிகாட்டிகளான மூதாதையர்களும் வீட்டிற்கு சேவகம் செய்வதையே பெண்களின் மகத்தான பணியாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபத்தான சமூக கட்டமைப்பைவிட்டும் ஒரு சுதந்திரமான சிந்தனையுள்ள பெண் வெளியில் வர யோசித்துப்பார்க்கவே முடியாமல் போய்விடுகின்றாள்.இப்படி ஒரு பெண் தன் வாழ்விலும் ஜெயிக்க வேண்டிய பல காரியங்கள் இருக்கின்றது என்று எண்ணிப்பார்க்கவே முடியாத அளவிற்கு அவளை இந்த சமூகம் வீட்டு சூழலுக்குள் வைத்து பணிவிடை செய்வதற்கு மட்டும் நிற்பந்திக்கும் அந்த நிலையைத்தான் இங்கு நான் பெண் அடிமைத்தனத்தின் உச்சமாக கருதுகின்றேன்.

அச்சம்,நாணம் ,என்பதே பெண்களிடம் காணப்பட வேண்டிய சிறந்த பண்புகள் என்பதாகக்கூறி அவளை நான்கு சுவற்றிற்குள் அடைக்க நினைப்பதையே இந்த சமூகம் அவளுக்குச் செய்யும் மாபெரும் அநீதியாகவும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஆக ஒரு சிறந்த பெண் என்பவள் தன் வீட்டிலேயே அடைபட்டுக்கிடப்பால், வெளியில் செல்லவேமாட்டால் என்ற அடக்குமுறை நிறைந்த சமூக கட்டமைப்பை சித்தரித்ததில் இந்த சமூகத்திற்கே பெரும்பங்கு இருப்பதாக இங்கு மிக ஆணித்தரமாக பதிவுசெய்துகொள்கின்றேன்.

அடுத்தபடியாக ஒருபெண் சந்திக்கும் மிகப்பெரும் அநீதி மற்றும் அடிமைத்தனம் அவளின் துணையை தேர்ந்தெடுப்பதில்தான் எனபதாகவே நான் காண்கின்றேன்.வாருங்கள் அதுகுறித்த சில விவரங்களையும் இங்கே பார்த்துவிடுவோம்.

2.துணையை தேர்ந்தெடுப்பதில் உரிமையை பறிப்பது.

ஒரு பெண் தான்உறவாடுவதற்கு தகுதியான நபரை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் கூட கொடுக்க மறுத்துக்கொண்டிருக்கின்றது என்பதை மனசாட்சியுள்ள எந்த மனிதர்களும் மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகின்றேன்.ஆம்.! தங்கள் வீட்டுப்பெண் அல்லது தங்கள் குடும்பத்துப்பெண் தாங்கள் விரும்பிய நபர்களை தவிர்த்து வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவே கூடாது என்ற ஆதிக்க உணர்வு உண்மையில் இன்றும் பெரும்பாலானோரிடம் புரையோடிப்போய் கிடப்பதாகவே நான் காண்கின்றேன்.

அவளுடைய கற்பும்,குலமும் கோத்திரமும் மதிக்கப்பட வேண்டியதுதான் என்றாலும் அதனை விரும்புவதற்கும்,விரும்பாமல் போவதற்கும் அவளுக்கு முழு உரிமையுள்ளது என்பதை ஏற்கமுடியாத இந்த சமூக கட்டமைப்பையே பெண் அடிமைத்தனத்திற்கு உதவும் ஆபத்தான சமூக கட்டமைப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன்.உண்மையில் ஒரு பெண் தான்விரும்பிய நபருடன் பழகக்கூடாது என்று நிர்பந்திப்பதைவிட மிக கொடிய பெண்அடிமைத்தனம் வேறு எதுவுமில்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆனால் அது விஷயத்தில் ஒரு பெண்ணின் உரிமையை பரிப்பதிலேயே இன்றைய சமூகம் மிக வலுவான சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இந்த மனித இனத்திற்கான சாபமாகவே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பர்களாக இருக்கட்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் தன் வீட்டார்களின் ஆசைக்கினங்கவோ அல்லது தான் சார்ந்த சமூகத்தின் ஆசைக்கினங்கவோதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற நிலையை உறுவாக்கியதில் இந்த அவளம் நிறைந்த சமூகத்திற்கே பெரும் பங்கு இருப்பதாக நான் காண்கின்றேன்.

தொடர்ந்து வாசிக்க அமேசானில் இடம்பெற்றிருக்கும் எனது"பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்" என்ற புத்தகத்தை பெற்று பயனடைந்துகொள்ளுங்கள்.

நன்றி:

வியாழன், 2 செப்டம்பர், 2021

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்?(Albert Einstein)

யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்
யார் இந்த அல்பர்ட் ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீன் 1879 மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.இவருடைய தந்தை ஒரு பொறியாளர் ஆவார்.அதனால் தன் மகனையும் ஒரு பொறியாளனாக ஆக்க வேண்டும் என்ற கனவிலேயே ஐன்ஸ்டீனையும் படிக்க வைத்தார்.ஆனால் சிறு பிராயத்தில் ஐன்ஸ்டீனுக்கு படிப்பின் மீது எந்த ஈடுபாடுமில்லாமல் இருந்தது.ஆகையால் அவர் பள்ளி பருவத்தில் ஒரு சராசரி மாணவணாக கூட இருக்கவில்லை.ஆனாலும் ஐன்ஸ்டீனுக்கு இயற்பியல் சம்மந்தமான ஏதோ ஒரு தேடல் இருந்தது.இந்த பிரபஞ்சத்தின் சில ரகசியங்களை கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது.

இதற்காகவே இயற்பியலில் இளங்கலை பட்டமும் படித்தார்.ஆனால் அவருடைய கல்லூரி காலங்களில் வகுப்பறைக்கு செல்வதைவிட ஏதேனும் ஒரு மரத்தடியில் அமர்ந்துகொண்டு இந்த புவியியலை உற்று நோக்கி குறிப்புகள் எழுதுவதிலேயே தன் பொழுதை கழித்தார்.இறுதியில் கல்லூரி கல்வியை முடித்தார்.ஆனால் படித்ததற்கான வேலை எங்கும் அவருக்கு கிடைக்கவில்லை.ஒரு சில வருடங்கள் வேலை தேடியே தன் வாழ்நாட்களை வெறுக்க ஆரம்பித்தார்.பிறகு அவருடைய தோழர் ஜெர்மனியில் உள்ள ஆய்வு கூடத்தில் ஒரு குமாஸ்தா வேலையிருப்பதாக கூறி அதில் சேர்த்துவிட்டார். அங்கு வேலைக்கு சேர்ந்த ஐன்ஸ்டீன் ஆய்வுஅறிக்கை பலவற்றை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்.அப்பொழுதும் மீண்டும் தன் ஆய்வு கனவுக்குள் குதித்தார்.ஒரு கட்டத்தில் இந்த உலகமே இன்று வியந்து போற்றும் இரு மகத்தான விதிகளை கண்டு அறிந்து இந்த உலகிற்கு கொடுத்தார்.

1.Special relativity-சிறப்பு சார்பு கோட்பாடு.

2.General relativity-பொது சார்புக் கோட்பாடு.

பிறகு இவற்றையே Theory of relativity -சார்புக் கோட்பாடு என்று அழைக்கப்பட்டது.இதை அவர் முன்வைத்தபோது இந்த உலகில் உள்ள பெரும்பாலானோர் இதனை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.ஏனெனில் இவர் ஒரு சாதாரண குமாஸ்தா வேலைசெய்பவர் என்பதும் அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மேலும் ஐன்ஸ்டீன் ஒரு ஜெர்மானிய யூதர் என்பதனாலும் ஆரம்பத்தில் சிலர் புறக்கணித்ததாகவும் வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.ஆனாலும் முழு பூசனியை சோற்றில் மறைத்துவிட முடியாதல்லவா?எனவே ஐன்ஸ்டீனின் பெரும் போராட்டத்திற்கு பின் அவருடைய இந்த கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.பிறகு ஐன்ஸ்டீன் அறிவியல் உலகில் புகழின் உச்சிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

சரி இப்பொழுது ஐன்ஸ்டீனின் அந்த கோட்பாடு அப்படி என்ன இந்த உலகிற்கு முக்கியமானதை கூறிவிட்டது என்று நீங்கள் யோசித்தால் வாருங்கள் அதன் அடிப்படைகளை அறிந்து கொள்வோம்.E=mc2 இந்த மொத்த பிரபஞ்சத்தின் முழு செயல்பாட்டையும் இந்த சிறிய விதிக்குள் அடக்கிவிட்டார் என்பதே அவருடைய மகத்தான கண்டுபிடிப்பாகும்.அதாவது Energy=mass times the speed of light squared -ஆற்றலும் ஒரு பொருளின் நிறையாற்றலும் ஒளி வேகமும் சமமான காலத்தில் பயணிக்கின்றது என்றார்.

இதனை கூறுவதால் என்ன பலன் என்று நீங்கள் யோசிக்கலாம்.இங்குதான் அவர் இந்த விதியை வைத்து மனிதன் காலத்தையும் கடக்க முடியும் என்பதையும் சிறிய ஆற்றலை வைத்தே மகத்தான சக்தியையும் உறுவாக்கிவிட முடியும் என்ற பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.ஒரு பொருளில் இயற்கையாகவே ஆற்றல் உள்ளது என்பதாலும் இந்த வெளி அண்டமானதும் தனக்குள் ஒரு ஆற்றலை வைத்திருக்கின்றது என்பதாலும் அவற்றை கடக்கும் ஒளி வேகத்தில் நாம் ஒரு ஆற்றலால் அழுத்தம் கொடுப்போமேயானால் அதன் மூலம் அப்பொருளில் பன்மடங்கு ஆற்றல் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

இதனை அடிப்படையாகக்கொண்டே இரண்டாம் உலகப்போரின் போது நியூக்லியஸ் அனுகுண்டுகள் தயாரிக்கப்பட்டது.தன்னுடைய கண்டுபிடிப்பை ஜெர்மனி மனித இனத்திற்கு எதிராக பயன்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐன்ஸ்டீன் எதிர்ப்பு தெறிவித்தார்.ஆனால் அவை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.ஜப்பானில் வெறும் 0.08 கிராம் உந்து சக்தி கொண்ட நியூக்லியஸ் அணுதான் பயன்படுத்தப்பட்டது.ஆனால் அதன் விளைவால் அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்கள் சம்பவ இடத்திலேயே செத்துமடிந்தார்கள்.மேலும் அதன் தாக்கம் மிக கொடியது என்பதால் இன்றுவரை அதன் பாதிப்பு அங்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.

ஆக ஐன்ஸ்டீன் இந்த உலகை அழிக்கும் ஒரு சக்தியையே கண்டுபித்து கொடுத்தார் என்று பலரும் இன்று குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் உண்மை என்னவெனில் அவர் இந்த உலகின் ஆற்றலையும் இந்த வெளியின் ஆற்றலையும் அளவிட்டு இதனை எப்படி கடந்து நாம் நமக்கான நலவுகளை தேடிக்கொள்ளலாம் என்பதையே கூறினார்.உதாரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் ஒரு தனி ஆற்றல் உள்ளது அவற்றின் மூலம் நாம் வேறொரு ஆற்றலை உறுவாக்க முடியும் என்பது மட்டுமே அவரின் மகத்தான விதியாக இருந்தது.அதன் அடிப்படையில்தான் இன்று நீரிலிருந்தும் கூட மின்சாரம் தயாரிக்கப்படிகின்றது.

அவர் கூறிய அந்த விதியின் அடிப்படையில்தான் பெட்ரோல், நிலக்கறி போன்ற பல்வேறு தனிமங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்களை எல்லாம் நாம் கண்டறிந்து அதன் மூலமாக பெரும் பெரும் கருவிகளை இயக்கிக் கொண்டிருக்கின்றோம்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் ஐன்ஸ்டீன் இந்த உலகிற்கு ஒரு மகத்தான வரப்பிரசாதம் என்பதாகவே நான் காண்கின்றேன்.மேலும் அறிவியல் உலகில் அவருடைய பங்கு மகத்தானதாக இருந்திருக்கின்றது என்பதையும் வருங்காலங்களிலும் அது இருக்கும் என்பதையும் நிச்சயமாக நம்மால் ஒருபோதும் மறுக்க முடியாது.
நன்றி: