சனி, 18 செப்டம்பர், 2021

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன?

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன
வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ன

முன்னுரை:

இன்றைய சூழலில் பெரும்பான்மையான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொருளாதாரம் சம்மந்தமான பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் அவைகள் மாணவர்களுக்கு புரியும் வண்ணமோ அல்லது மாணவர்களின் வாழ்வியலோடு கலந்தோ கற்பிக்கப்படுவதில்லை என்பதே வருத்தத்திற்குறிய உண்மையாகும்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான பேராசிரியர்களே வியாபாரத்தின் அடிப்படை கூறுகளை சரியாக புரியாததுதான் அவ்வாறு நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த கட்டுரையில் வியாபாரத்தின் சில தத்துவங்களை சுட்டிக்காட்டுவதின் மூலம் வியாபாரம் என்றால் என்ன என்பதையும் அவைகள் எதனையெல்லாம் அடைப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது போன்ற முக்கிய அடிப்படை விஷயங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இது வியாபரத்தின் அடிப்படையை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.

வியாபாரம் என்றால் என்ன?

இதற்கு பொருளாதார கோட்பாட்டு புத்தகங்களில் பல்வேறு பொருள்கள் கூறப்பட்டிருந்தாலும் இயல்பான வியாபார விதியை குறிப்பிடவே நான் விரும்புகின்றேன்.அதாவது."இரு நபர்கள் தங்களின் மனப்பொறுத்தத்துடன் ஒப்புதல் பெற்று தங்களுக்குள் ஒன்றை பரிமாறிக்கொல்வதற்கே இயல்பு வாழ்வில் வியாபாரம் என்று சொல்லப்படுகின்றது."

இங்கு வியாபாரத்தின் முதல் அடிப்படையாக பார்க்கப்படுவது இருவரின் மனப்பொறுத்தம் மட்டுமே என்பதை பொருளாதார வல்லுநர்கள் மிக ஆழமாக வலியுறுத்துகின்றனர்.ஏனெனில் எந்த வியாபாரத்தில் மனப் பொறுத்தமில்லாமல் வற்புறுத்தலின் பெயராலோ அல்லது மிரட்டலின் பெயராலோ கொடுக்கவோ வாங்கவோ செய்யப்பட்டிருக்குமோ அந்த வியாபாரம் செல்லாது என்பதே வியாபாரத்தின் அடிப்படை விதியாகும்.

எப்படி மனப்பொறுத்தமில்லாத வாழ்க்கையை முறித்துக்கொள்வதற்கு கணவன் மனைவி இருவருக்கும் உரிமை இருக்கின்றதோ அதனைப் போன்றே மனப்பொறுத்தமில்லாத வியாபாரத்தை முறித்துக்கொள்ள இருவருக்குமே உரிமை இருக்கின்றது என்பதே இதன் கருத்தாகும்.

வியாபாரம் ஏன் உறுவானது?

இரு மனிதர்கள் தங்களின் வேறுபட்ட தேவையை பரிமாரிக் கொள்வதற்காகவே வியாபாரம் என்ற முறை உறுவானது.இது பண்டைய காலம் தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டும் வருகின்றது.அன்றைய வியாபாரம் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது.ஆனால் இன்று அந்த வியாபாரம் பல்வேறு பரினாம வளர்ச்சி கண்டு வியாபாரம் இல்லையெனில் மனித வாழ்வு இல்லை என்றளவிற்கு மனித வாழ்வின் அடிப்படை அம்சமாக உறுமாறி இருக்கின்றது.எனவே இங்கு இன்றைய வியாபாரம் எத்தகைய நோக்கங்களுகெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பது சம்மந்தமாக அறிந்து வைத்துக்கொள்ள நாம் கட்டாயம் கடமைபட்டிருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒரு சில அடிப்படையான விஷயங்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

இன்றைய வியாபாரத்தின் நோக்கங்கள் யாவை?

1.தனி மனித தேவையை பூர்த்தி செய்தல்.

2.சமூக தேவையை பூர்த்தி செய்தல்.

3.நாட்டின் வளத்தை பெறுக்குதல்.

4.குறிப்பிட்ட நபர்களின் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்தல்.

இந்த நான்கு நோக்கங்களே பெரும்பான்மையான வியாபாரத்தில் காணப்படுகின்றது.ஆரம்ப காலங்களில் மனிதர்கள் உற்பத்தியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் நேருக்குநேர் சந்தித்து வியாபாரம் செய்து வந்ததால் பெரும்பாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே தங்களின் பொருட்களை பண்டமாற்றம் செய்து தங்களின் வியாபாரத்தை தொடர்ந்தார்கள்.அதன்பிறகே பொருட்களை சந்தைப்படுத்துதல் என்ற வழக்கம் தோன்றியது.அது எப்படி தோன்றியது என்பதை பார்த்துவிடுவோம் வாருங்கள்.

சந்தைப்படுத்தல் முறை எப்படி உறுவானது?

பண்டமாற்றுமுறை கடினமாக இருப்பதை உணர்ந்து அதை எளிமையாக்க ஒரு காலத்தில் கொடுக்கள் வாங்களை சந்தைபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.அதாவது தங்களுக்கு தேவையானதை கொடுக்கல் வாங்கள் செய்துகொள்ள (வியாபாரத்திற்கென்று) ஒரு தனி இடத்தை நிர்னயித்து அங்குதான் வியாபாரம் நடக்கும் என்றும்,அங்கு வந்தே மக்கள் விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டும் என்றும் அங்கு நிர்ணயிக்கப்படுவதுதான் விலை என்றும் பல்வேறு புதிய திட்டங்களை தங்களுக்கு தாங்களே மக்கள் வகுத்துக்கொண்டனர்.

இப்படித்தான் வியாபாரம் என்பது சந்தைபடுத்தல் முறையாகமாறியது.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மக்களின் தேவையையும் வியாபாரியின் தேவையையும் பூர்த்தி செய்யும் அந்த இடம் போட்டிக்குள்ளாக்கப்பட்டது.ஒரே பொருளோ அல்லது பலவிதமான பொருளோ பல்வேறு விதங்களில் வியாபார வடிவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது.ஆனால் அவற்றிலும் மக்கள் பல்வேறு சிக்கள்களை சந்தித்தனர்.ஏனென்றால் சில சமயங்களில் மக்களுக்கு பொருளின் தேவை அதிகமாக இருந்தது ஆனால் பொருள் மிக குறைவாக இருந்தது.சிலசமயங்களில் வியாபாரப் பொருட்கள் அதிகமாக இருந்தது ஆனால் மக்களின் தேவை குறைவாக இருந்தது.

இதனை எல்லாம் அனுபவங்களால் புரிந்துகொண்ட அன்றைய பொருளாதார முதலைகள்(Corporates) தான் வெறும் லாப நோக்கை மட்டும் கொண்ட நான்காவதாக மேலே நான் குறிப்பிட்டிருக்கும் தனிமனித லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட விசித்திரமான வியாபார முறையை உறுவாக்கினார்கள்.அதாவது பொருட்களை எப்படியாவது மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற ஆபத்தான வியாபாரம் செய்யும்முறை என்பது உறுவாக்கப்பட்டது.உண்மையில் இந்த வியாபாரமுறையானது மனித இனத்தை இறுதி கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவே நான் கருதுகின்றேன்.அத்தகைய வியாபாரமுறை குறித்து அடுத்த கட்டுரையில் பதிவிடுகின்றேன்.
நன்றி:

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!
அவசரம் வேண்டாம்!பொறுமையாக இருங்கள்!

முன்னுரை:

இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் இருக்கின்றது என்ற உண்மையை பெரும்பான்மையான சமயங்களில் மனிதன் புரிந்துகொள்ள முற்படுவதே இல்லை என்பது மிக பரிதாபத்திற்குறிய விஷயமாகும்.மனிதன் தான் விரும்பிய அல்லது எண்ணிய எதனையும் உடனே அடைந்துவிட வேண்டும் என்ற ஆசை அவனை உயர்ந்த மகத்தான மனித உச்சத்தை அடைவதைவிட்டும் தடுத்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

மேலும் இந்த உலகில் பொறுமையாக இருந்து,தான் விரும்பியதை அடையாதவர்களைவிட அவசரப்பட்டு எல்லாவற்றையும் தொலைத்தவர்களே அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.இங்கு பலரும் பொறுமை என்பது பலஹீனத்தின் அல்லது இயலாமையின் வெளிப்பாடு என்று எண்ணிக் கொள்கின்றனர்.ஆனால் அவசரமும் நிதானமின்மையும்தான் மிகப்பெரிய பலஹீனம் என்பதை அவர்கள் உணரத்தவறிவிடுகின்றனர்.

ஆம்..!

யாரிடம் பொறுமையும் நிதானமும் இருக்குமோ அவர் இந்த உலகில் பிரம்மாண்டமான சாம்ராஜ்யத்தை அசைக்க முடியாதளவு உயர்த்தி நிறுத்திவிட முடியும்.ஆனால் யாரிடம் பொறுமையும் நிதானமும் இல்லையோ அவரால் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்ட உறுதிமிகு சாம்ராஜ்யங்களும் கூட  சுக்கு நூறாக்கப்பட்டுவிடும் என்பதே நிதர்சனமாகும்.பலசமயங்களில் ஒரு நிமிட அவசரம் அல்லது நிதானமின்மை நம்மை 100 வருட கைசேதத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது என்பதே இந்த உலகின் மகத்தான பேருண்மையாக இருக்கின்றது.

இந்த உலகில் நாம் வியப்புடன் பார்க்கும் பல்வேறு சாம்ராஜ்யங்கள் ஏதோ சில நொடிகளில் கட்டமைக்கப்பட்டதல்ல.மாறாக எத்தனையோ யுகங்களின் சகிப்புத்திறனால் உறுவாக்கப்பட்டவையே என்ற பேருண்மையை வரலாற்றை சற்று ஆழமாக உற்றுநோக்கும் சமயம் வெள்ளிடை நீரைப்போல் வெண்மையாக நாம் உணர்ந்து கொள்ளலாம்."அவசரக்காரனுக்கு புத்தி மட்டு"என்ற தமிழ் அடைமொழி மனித உலவியலை மிக அற்புதமாக பேசும் ஒரு தமிழ் சொற்றொடர் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் அவசரம் என்பது நம்முடைய மனித மதிப்பீடான அறிவை முற்றிலும் மட்டுப்படுத்திவிடுகின்றது என்பதே மகத்தான உண்மையாக இருக்கின்றது. சாலைகளை கடப்பதில் தொடங்கி கடைகளில் பொருள் வாங்கும் வரைக்கும் எதிலும் அவசரம் என்ற நிலையை மனிதன் அடையும்பொழுது அவன் உண்மையில் தனக்குத்தானே மிகப்பெரிய தண்டனையை கொடுத்துக் கொள்கின்றான் என்றே நான் கருதுகின்றேன்.

பிறரை முந்துவதையோ அல்லது தோற்கடிப்பதையோ தனக்கான வெற்றியாக தானே எண்ணிக்கொண்டு தனக்குத்தானே தண்டனை அளித்துக்கொள்ளும் மனிதர்களை காணும் சமயம் உண்மையில் நான் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன்.அவசரம் என்பது நம்முடைய சிறிய அற்பத்தனமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்துவிடும் என்றாலும் அது இந்த உலகின் மகத்தான செயலை ஒருபொழுதும் உருவாக்கிவிடாது என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது.

எனவே அண்பர்களே.....!

எதெற்கெடுத்தாலும் அவசரம், துரிதம் என்று தயவுகூர்ந்து உங்களுக்கு நீங்களே தண்டனை வழங்கிக்கொள்ள முற்படாதீர்கள்.எதனையும் உணர்ந்து நிதானத்துடன் செயல்படத்தொடங்குவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வை மிக அர்த்தமுள்ளதாக உணரத்தொடங்கிவிடுவீர்கள்.எல்லோரும் அவசரப்படுகின்றனர் என்பதற்காக நீங்களும் உங்களை அதே படுகுழியில் தள்ளிக்கொள்ளாதீர்கள்.உங்களுக்கானதை நீங்கள் முடிவு செய்து பழகிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஸ்திரமாக நிதானத்துடன் செயல்படுங்கள். நிசயம் இந்த வாழ்க்கை உங்களுக்கு இன்பம் தர வல்லதாக அமைந்துவிடும். இவற்றிற்கு மாறாக அவசரத்தையும் நிதானமின்மையையும் நீங்கள் உங்களுக்காக தேர்ந்தெடுதுக்கொண்டால் நிச்சயமாக உங்களை நீங்களே ஒரு குழிக்குள் புதைத்துக்கொண்டு மண்ணையும் நீங்களே உங்கள் மீது இரைத்துகொண்டிருப்பதைப் போன்றதாகும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்?(Who is the Periyar E.V.Ramasamy?)

யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்
யார் இந்த ஈ.வெ.ராமசாமி பெரியார்


தமிழக மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு மகத்தான "கதாநாயகன்"தான் பெரியார் என்ற போற்றுதலுக்குறிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்கள் என்பதாகவே நான் காண்கின்றேன்.ஏனெனில் அவருடைய வாழ்வியல் செயல்பாடுகள் அனைத்தையும் நான் உற்றுநோக்கிய சமயம் இந்த தமிழ் சமூகத்தை உயர்த்தி நிறுத்துவதிலேயே அவர் தன் வாழ்வு முழுவதையும் அற்பனித்து இருப்பதை என்னால் காண முடிந்தது.

இன்றைய நிகழ் உலகின் கதாநாயகர்கள் அனைவரும் மக்களுக்கு பண உதவி செய்தோ அல்லது ஏதேனும் பொருள் உதவி செய்தோ தன்னை கதா நாயகர்களாக நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.ஆனால் பெரியாரை என்னால் அப்படி காணமுடியவில்லை.மாறாக அவர் ஒரு சமூகத்திற்கான வாழ்வியல் விடியளுக்காக தன்னை முழுவதுமாக அற்பனித்திருப்பதை காணும்பொழுது எவ்வாறு நான் அவரை உண்மை கதாநாயகன் என்று கூறாமல் ஒரு எழுத்தாளனாக கடந்துவிட முடியும்.?

எனவேதான் பெரியாரின் வாழ்வியல் குறித்த அறிமுகமான என்னுடைய புத்தகத்திற்கு பெயரே "தமிழர்களின் கதாநாயகன் பெரியார்" என்று பெயரிட்டுள்ளேன்.உண்மையில் அவர் இந்த நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார்களுக்கு மிகப்பெரும் வில்லனாக திகழ்ந்தார் என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன்.ஆனால் அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அடித்து, அடக்கி ஆழவும்,சுரண்டிப் பிழைக்கவும் நினைத்தவர்களுக்கே வில்லனாக இருந்தார் என்பதை கவனிக்கும் சமயம் அங்கும் அவர் உண்மை கதாநாயகன் என்ற பெருமையையே சேர்த்துக்கொண்டுவிட்டார் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

பெரியாருக்கான அறிமுக உரையான என்னுடைய சிறிய புத்தகத்தில் மூன்றே மூன்று பகுதிகளை மட்டுமே பதிவு செய்வது எனது நோக்கம் என்பதால் பெரியார் சம்மந்தமான அனைத்து விஷயங்களையும் நான் தொகுக்கவில்லை என்பதை முன்கூட்டியே குறிப்பிட்டுவிடுகின்றேன்.ஏனெனில் அந்த புத்தகத்தில் பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் உண்மை கதாநாயகனாக திகழ்ந்ததற்கான அடிப்படை காரணிகளை மட்டுமே தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.

அதாவது பெரியார் வாழ்ந்த சமயத்தில் இந்த தமிழ் சமூகம் எத்தகைய நிலையில் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது என்பது சம்மந்தமாகவும் அதனை பெரியார் எப்படி கலைஎடுத்தார் என்பது சம்மந்தமாகவும் மேலும் தமிழர்களையும் தமிழ்மொழியையும் குறிவைத்து தாக்க நினைத்தபோது அதனை எவ்வாறு உயர்த்தி நிறுத்தினார் என்பது சம்மந்தமாகவும் மட்டுமே இந்த சிறிய புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கின்றேன்.இறைவன் நாடினால் பெரியாரின் முழு வாழ்வியலையும் தனி ஒரு புத்தகமாக தொகுத்து வழங்குகின்றேன்.(அப்பணியை செய்து கொண்டும் இருக்கின்றேன்.)

பெரியார் தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற கதாநாயகனாக ஆவதற்கு அன்றைய சமூக கட்டமைப்பே காரணமாக இருந்தது என்பதால் பெரியார் காலத்தில் அன்றைய சமூக கட்டமைப்பு எவ்வாறு இருந்தது என்பது சம்மந்தமாக நாம் புரிந்து வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கின்றது என்பதால் முதலில் அது சம்மந்தமாக இங்கு பார்ப்போம்.


பெரியார் காலத்தில் தமிழ் சமூகம் எவ்வாறு இருந்தது.?

  • குறிப்பிட்ட சில மக்கள் சூத்திரர்கள் எனக்கூறி அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தைவிட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
  • பார்ப்பனர்கள் என்று கூறப்படும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தவர்கள் மட்டும் உயர் சாதியினர் என்றும் அவர்களுக்கு சரி சமமாக ஏனைய எச்சமூகத்தை சார்ந்தவர்களும் இடம் பெறக்கூடாது என்ற சமூக அமைப்பும் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.
  • கீழ் சாதியினராக பார்க்கப்படுவர்களுக்கு கல்வி வழங்கப்படக் கூடாது என்பது தான் கல்வி கொள்கையாக இருந்தது.
  • அரசு அலுவல்கள் அனைத்திலும் பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற சூழலே மிகைத்திருந்தது.
  • உயர் சாதியினராக பார்க்கப்படும் பார்ப்பனர்கள் புழங்கும் பொது இடங்களில் கீழ் சாதியினர் புழங்கக் கூடாது என்றும் இன்னும் அவர்களைப் போன்று செறுப்போ அல்லது தோளில் துணியோ அல்லது குடை பிடித்துக் கொண்டோ தெருவில் நடமாடக் கூடாது என்றும் வெளிப்படையாகவே தடை இருந்தது.
  • அவ்வாறே கீழ் சாதியினராக பார்க்கப்படுபவர்கள் பொது குழங்களிலோ அல்லது கிணருகளிலோ தண்ணீர் அருந்த முடியாது.
  • ஊரின் ஏதோ ஒரு பகுதியில் இருக்கும் தேனீர் கடையிலும் கீழ் சாதியினர் கொட்டங்குச்சியில் தேனீரை பெற்றே குடிக்க வேண்டும் என்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தது.
  • அசிங்கமான வார்த்தைகளாலும் இழிவான பெயர்களாலும் உயர் சாதியை சார்ந்த சிரியவர்கள் அழைத்தாலும் கீழ் சாதியினர் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • உணவு விடுதிகள் ,குளிக்கும் அறைகள் மற்றும் கோவில்களுக்குள் உயர் சாதியினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்ற கொடூரம் அரங்கேற்றப்பட்டது.
  • மாட்டு வண்டிகளில் அமர்ந்து செல்லக் கூடாது,அதிலும் குறிப்பாக எதிரில் பார்ப்பனர் வந்துவிட்டால் ஓரமாக ஓடிச் சென்று கண்ணில் படாதவாறு நின்று கொள்ள வேண்டும்.
  • கீழ் சாதியினர் தங்க நகைகளை ஒரு பொழுதும் அணியக் கூடாது.
  • கீழ் சாதியினர் மண் சுவரால் ஆன ஓலை குடிசைகளில் மட்டுமே வாழ வேண்டும்.
  • கீழ் சாதியினர் உலோக பாத்திரங்கள் எதுவும் பயன்படுத்தக் கூடாது.
  • கீழ் சாதி பெண்கள் மாராப்புத் துணி அணியக்கூடாது என்றும் இன்னும் மேல் சட்டை அணியக் கூடாது என்றும் பனிக்கப்பட்டிருந்தனர்.
  • பெண்கள் என்றாலே இழி பிறவிகள் என்று பரவலாக கருதப்பட்டு வீட்டில் எடுபிடி வேலைக்கென்றே வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்குறிப்பிட்ட அனைத்து மனித உரிமை மீறல்களும் இந்நாட்டை ஆண்ட சேரர்கள் ,மற்றும் சோழர்கள் ,மற்றும் பாண்டியர்கள், மற்றும் நவாப்கள் ஆகிய அனைவரின் ஆட்சி காலத்திலும் கொஞ்சமும் குறைவின்றி குறிப்பிட்ட ஒரு சமூகத்தாரால் மட்டுமே அரங்கேறியதை வரலாற்றின் மூலம் அதிகாரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
இத்தகைய மனித உரிமை மீறல்களையெல்லாம்  கலைவதற்கு பெரியார் கையாண்ட வழிமுறைகள்தான் அவரை தமிழ் மண்ணின் போற்றுதலுக்குறிய கதாநாயகனாக நிலைநிறுத்தியது என்பதாகவே நான் நம்புகின்றேன்.
எனவே அடுத்தபடியாக தமிழ் மக்களின் இந்த இழிவை துடைக்க பெரியார் எத்தகைய வழிமுறைகளை கையாண்டார் என்பதைக் குறித்து பார்ப்பதே இங்கு உசிதமாக இருக்கும் என்பதால் அவற்றைப்பற்றி பார்ப்போம்..!
பெரியார் இந்த தமிழ் சமூகத்தின் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை கலைய மூன்று முக்கிய ஆயுதங்களை மிக வீரியமாக பயன்படுத்தியதாக வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது. 

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

2.எழுத்துப் பிரச்சாரம்.

3.தமிழுக்கான அரும்பணியும் அரசியல் பங்கும்.

பெரியார் இந்த மூன்று பெரும் ஆயுதங்களாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை துடைத்துவிடலாம் என்று தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணிக்க முன்வந்தார்.

1.சொற்பொழிவு பிரச்சாரம்.

தொடர்ந்து வாசிக்க என் புத்தகத்தை அமேசானில் பெற்று பெரியாரின் ஒப்பற்ற வாழ்வின் அந்த மூன்று அரும்பணிகளும் எவ்வாறு இருந்தது என்பதையும் அறிந்து பலனடைந்து கொள்ளும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.

புதன், 15 செப்டம்பர், 2021

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)

யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)
யார் இந்த அறிஞர் அண்ணா?(Who is the Annadurai)


முன்னுரை

இன்று செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்றைய நன்நாளிலே அவரை இந்த தமிழக மக்கள் நன்றி உணர்வுடன் நினைவுகூற கடமைபட்டுள்ளனர்.ஏனெனில் இந்த தமிழ் சமூகத்தை பீடித்திருந்த அடக்குமுறைகளையும் அடிமைத்தனங்களையும் அரசியல் ரீதியாக தவிடு பொடியாக்கிக்காட்டிய ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்த மாமனிதர் அவர்.

அவருடைய வரலாற்றை சுறுக்கிக்கூறிவிட முடியாது என்பது எனக்குத் தெரிந்தும் வேறுவழியின்றி மிக வட்டுறுக்கமாக இந்த கட்டுரையில் அவரின் ஒப்பற்ற வாழ்வின் சிறு பகுதியை மட்டும் பதிவு செய்கின்றேன்.அவருடைய தமிழ் மண்ணிற்கான சேவையை தொகுத்து வந்து கொண்டிருக்கின்றேன். இறைவன் நாடினால் மிகவிரைவில் அவற்றை புத்தமாக வெளியிடுகின்றேன்.

இங்கு அறிஞர் அண்ணாவின் வாழ்வை மூன்று பகுதிகளாக பிரித்திருக்கின்றேன்.

 1.அவர் பெரியாரிடம் கற்ற சமூக அக்கரை மற்றும் விடுதலை.
 2.ஆசானுக்கே ஆசானான ஆச்சர்யமிகுந்த அவரது அரசியல்.
 3.சமூகத்திற்கு ஆற்றிய அவரது பணிகள் மற்றும் தொண்டுகள்.

1.பெரியாரிடம் கற்ற சமூக அக்கரையும் விடுதலை உணர்வும்.

அறிஞர் அண்ணாவின் வாழ்வை குறித்து பேசும் பொழுது அங்கு பெரியாரை விட்டுவிட்டு செல்லவே முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் பெரியாரோடே இரண்டற கலந்து அவரின் ஆழமான அனைத்து சமூக நீதிகளையும் மேலும் இந்த தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அங்குளம் அங்குளமாக அரிஞர் அண்ணா பாடம் படித்திருப்பதை வாரலாறு மிக வெளிப்படையாகவே எடுத்தியம்புகின்றது.

அவ்வளவு ஏன் பெரியாரின் வலது கையாகவோ அல்லது இடது கையாகவோ இல்லாமல் இரு கையாகவுமே திகழ்ந்தவர்தான் அறிஞர் அண்ணா என்று கூறினாலும் அது மிகையாகாது.உண்மையில் வரலாற்றை மிக ஆழமாக உற்றுநோக்கும் பொழுது அறிஞர் அண்ணா பெரியாரின் அலப்பரிய நம்பிக்கைக்கு முழு பாத்திரமான ஒரு செல்லப்பிள்ளை என்றும் கூட குறிப்பிடலாம்.அறிஞர் அண்ணா பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் துவங்கிய ஆரம்ப இடமே பெரியாரின் "விடுதலை" பத்திரிக்கையும் ,"குடியரசு" பத்திரிக்கையும் தான்.
ஆம்...!
அங்கிருந்து தான் அறிஞர் அண்ணாவின் நீண்ட நெடிய அரசியல் மற்றும் சமூக தொண்டுகள் போன்ற சிந்தனை ஓட்டங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கியது. பெரியாரின் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தரும் திராவிட தத்துவார்த்தங்களையும்,கடவுளின் பெயராலும் சாதி,மதங்களின் பெயராலும் தன் இன மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்குபவர்களின் உண்மை முகங்களையும் பெரியாரிடமிருந்து மிக சாதூர்யமாக அறிஞர் அண்ணா கற்றரிந்தார்.அதன் விளைவாகவே நேரடியாக சமூகத்தொன்டாட்ட அரசியலில் குதித்தார்.

2.ஆசானுக்கே ஆசானான அறிஞர் அண்ணாவின் அற்புத அரசியல்.

அறிஞர் அண்ணாவின் அரசியல் பயணமும் பெரியாரிடமிருந்தே துவங்கியதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.ஆம்...!அறிஞர் அண்ணா முதல் முதலில் பெரியார் தலைமையில் காங்கிரசிற்கு எதிராக உறுவாக்கப்பட்ட நீதிக்கட்சியிலிருந்துதான் தன் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.தன்தமிழ் மக்களை சுரண்டிப்பிழைத்துக்கொண்டிருக்கும் காங்கிரசின் அரசியலில் முற்றிலும் நம்பிக்கை இழந்த ஆசானிற்கு மக்களுக்கான புதிய அரசால் தமிழ் சமூகத்தை காத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் முயற்சியில் அரசியல் கலமாடத் துவங்கினார்.

தன் சமூகத்தின் மீது தெலிக்கப்பட்டிருக்கும் இழிவை போக்குவதற்கு முதல் தடைக்கல்லாக இருப்பதே இந்த தரித்திரம் பிடித்த அரசியல்தான் என்பதை ஆழமாக உணர்ந்திருந்த பெரியார் தன் செல்லப் பிள்ளையான அண்ணாவின் நிலையும் மாறிவிடுமோ என்று அஞ்சினார்.ஆனால் அங்கு தான் அறிஞர் அண்ணா தன் ஒப்பற்ற ஆசானின் கனவுகளை காக்க வந்த பெரும் போராளி என்பதை நிறூபித்து காண்பித்து ஆசானுக்கே ஆசானாக உறுவெடுத்தார்.

அரசியலில் பயணித்துக்கொண்டே பெரியாரின் திராவிடக்கொள்கையை தன் எழுத்தாலும், நாடகங்களாலும், திரைப்படங்களாலும் எட்டுத்திக்கும் பரந்து விரியச்செய்தார்.தன் கட்சிக்கு பெயரே"திராவிட முன்னேற்ற கழகம்"என்று பெயர் சூட்டினார்.நாடாலுமன்றத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுக உரையிலேயே தன்னை திராவிடன் என்று அடையாளப் படுத்திக்கொண்டார்.இந்தியாவிலேயே காங்கிரஸிற்கு எதிராக முதல் முதலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் காண்பித்தார்.

3.அரிஞர் அண்ணாவின் அரும்பணிகள்.

  • இராஜாஜியின் குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி ஏந்தி நின்றார்.
  • மும்மொழிக் கொள்கையை முடக்கி இரு மொழி கொள்கையை சட்டப்பூர்வமாக்கினார்.
  • இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வடவர்கள் நினைத்த போது நாடாளு மன்றத்தையே கேள்விக்கனைகளால் திக்குமுக்காடச் செய்தார்.
  • தமிழகத்தின் மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றினார்.
  • ஜமீன்தாரிகளின் நிலச்சுரண்டலையும் பிராமணத்தின் மனித உரிமை மீரல்களையும் "நல்ல தம்பி"மற்றும் "வேளைக்காரி" போன்ற திரைப்படங்களால் தோழுறித்து காண்பித்தார்.
  • ஆரிய மாயை என்ற புத்தகத்தை எழுதி ஆரியத்தின் கோர முகத்தை உலகறியச் செய்தார்.இதனால் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
  • "Home Land "என்ற ஆங்கில வார பத்திரிக்கையாலும் "திராவிடம்"என்ற தமிழ் இதழாலும் காங்கிரஸார்கள் மற்றும் பிராமணர்களின் கூடாரங்களை அசைத்துக் காண்பித்தார். 
  • இன்னும் இந்த தமிழ் மண்ணிற்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராலம் ஏராலம்...!அவைகள் அனைத்தையும் இந்த சிறிய கட்டுரையில் சுறுக்கிவிட முடியாது என்பதால் வருத்ததுடனே கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருகின்றேன்.
இறுதியில் அறிஞர் அண்ணா போயிலை உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பதால் புற்று நோய்க்கு ஆளானார்.அது அவரின் உயிரையும் குடிக்கத் தவறவில்லை.எனவே அதே நோயால் காலமுமானார்.அவருடைய இறுதி ஊர்வலமோ இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வரலாறாக மாறிப்போனது.
ஆம்...!
இந்த மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசித்த அவருடைய இறுதி ஊர்வலத்தில் கிட்டதட்ட 1 கோடியே 50 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கிண்ணஸ் புத்தகத்தில் இன்றும் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்த தமிழ் மக்களுக்காக போராடிய அவருக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
இன்று கிண்ணஸ் புத்தகங்களை எல்லாம் தாண்டி எக்காலமும் தமிழர்களின் நெஞ்சங்களில் கலந்துவிட்ட அன்பு அண்ணண் ஆறடி பள்ளத்தில் ஆழ்ந்த துயில் கொண்டாலும் அவர் ஆற்றிய பணிகள் இன்றும் தமிழ் மக்களை காப்பதால் உயிர்ப்புடனே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அத்தகைய தமிழ் மண்ணின் நேசனை அவர் பிறந்த இன்று நினைவு கூறுவதில் தமிழ் மகன்களாக நம்மில் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ள கடமைபட்டிருக்கின்றோம்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது?

கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது
கல்வி எப்படி ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது

1939 ஆங்கிலேயே காலம் தொட்டு இந்திய குடியரசு அமைத்த பின்பும் கல்வி மாநில ஆட்சியின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது.ஆனால் 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி உள்நாட்டு பிரச்சனைகளால்  நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறி நாடு முழுவதும் அவசர சட்டத்தை அறிவித்தார்.அச்சமயம் பல்வேறு அரசியல் சட்டரீதியான உரிமைமீரல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அந்த உரிமைமீரல்களில் ஒன்றுதான் கல்வி உரிமையை ஒன்றிய அரசு தன் அதிகாரத்திலேயே வைத்துக்கொண்டதும் என்பதாக நம்மால் கடந்த காலங்களை புரட்டிப்பார்க்கும் பொழுது அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய துணை குடியரசு தலைவரான வெங்கைய நாயுடு அந்த அவசர சட்டத்திற்கு வேறொரு காரணத்தையும் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டு காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.அதாவது இந்திரா காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினருக்கான வெற்றி செல்லாது என்று அலஹாபாத் நீதி மன்றம் அறிவித்ததே இந்த அவசரநிலை சட்டத்திற்கு மிக முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டு காட்டுகின்றார்.

எது எப்படியோ.!

இவற்றில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 1977 லிலேயே அவசர சட்டம் நீக்கப்பட்ட பின்பும் ஒன்றிய அரசு அரசியல்சாசன சட்டத்தின்படி கல்வியில் மாநிலத்திற்கான சுய உரிமையை வழங்கமறுத்துவிட்டதே மாநில ஆட்சிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.மாநில அரசிடம் கல்வியை வழங்காமல் போனதற்கான பொய் காரணத்தையும் ஒன்றிய அரசு அன்றே முன் வைத்தது.அதாவது தரமான சீரான ஒரேமாதிரியான கல்வியை ஒன்றிய அரசே வகுத்து வழங்கும் என்பதுதான் அந்த மாநில உரிமையை பறித்துக் கொள்வதற்கான பொய்யான வாக்குறுதி.

வாக்குறுதியை வழங்கிய அரசு அதில் உண்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை.தரமான கல்வி என்ற பெயரில்  பல்வேறு மாநிலங்களிலும் மாநில மொழியை புறக்கணித்து விட்டு இந்தியை புகுத்த நினைத்ததும், குலக்கல்வி திட்டத்தை அமல்படுத்த பாடுபட்டதுமே வெளிச்சத்திற்கு வந்தது.அது அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி வாய்ப்பை பறிக்கும் படியான நீட் போன்ற தேவையற்ற தேர்வுகளையும் தானே முன்னெடுத்து நிறுத்துவதின் மூலம் தனக்கு சாதகமான குறிப்பிட்ட சாரார்களை மட்டும் குறிப்பிட்ட துறைகளில் ஆக்கிரமிப்பு செய்யவே வழி வகை செய்துகொண்டது.

(குறிப்பு: இன்றைய இரயில்வே துறையிலிருந்து,தபால் துறை வரை இந்தியின் ஆதிக்கமும் வடவர்களின் பங்களிப்புமே அதிகம் காணப்படுவது மத்திய அரசின் வஞ்சகத்திற்கு பெரும் உதாரணமாகும்.)இதையெல்லாம் கேள்வி கேட்க எந்த மாநிலங்களும் துணியாத நிலையில் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில கல்வி உரிமையை கோரியிருப்பதும்,நீட் போன்ற போலியான தேர்வுகள் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் உயர்கல்வியை பறிப்பதை எதிர்ப்பதும் தமிழக மக்களுக்கான விடியாலாகவே பார்க்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகின்றேன்.!